கோவை எலக்ட்ரிசியன் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை திருட்டு..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பக்கம் உள்ள கோவில்பாளையம், சேரன் நகரை சேர்ந்தவர் ராமசாமி ( வயது 65) எலக்ட்ரீசியன் .இவரது மனைவி வள்ளி இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகிவிட்டது.. ராமசாமி தனது குடும்பத்துடன் கடந்த 20ஆம் தேதி ராமேஸ்வரத்திற்கு சென்று விட்டு நேற்று முன்தினம் மாலையில் வீட்டுக்கு வந்தார் .அப்போது வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பீரோ திறந்து கிடந்தது . அதில் இருந்த 18 பவுன் தங்க நகைகளை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து கிணத்துக்கடவு போலீசில் ராமசாமி புகார் செய்தார்.இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி,சப் இன்ஸ்பெக்டர் திருமலைசாமிஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். கொள்ளைகளின் கைரேகை பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.