கோவை மத்திய சிறைக்குள் கஞ்சா கடத்தியவர் கைது.!!

கோவை: அவினாசி பக்கம் தெக்கலூர், காமராஜர் நகரை சேர்ந்தவர் சவுரப் குமார் ( வயது 28 ) இவர் நேற்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள குணால் குமார் என்பவரை பார்க்கச் சென்றார். பார்வையாளர்கள் அறையில் இவரை சிறை அதிகாரிகள் சோதனை செய்த போது அவரிடம் 1 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து ஜெய்லர் சரவணகுமார் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். போலீ சார் வழக்கு பதிவு செய்து சவரப்குமாரை கைது செய்தனர.