போலீசாக நடித்து பணம் பறிக்க முயன்றவர் கைது.!!

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள செட்டிபுதூரில் ஒட்டல் நடத்தியவர் மூர்த்தி. இதேபோல காடுவெட்டிபாளையத்தில் ஓட்டல் நடத்தி வருபவர் துரைசாமி . இவர்களிடம் செல்போனில் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று கூறி மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டார். அப்போது ஓட்டலில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாகவும், உங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க தலா ரூ.10 ஆயிரம் ஆன்லைனில் ” கூகுள் பே” மூலம் வழங்குமாறு மிரட்டியுள்ளார். இதனால் அவர்கள் 2 பேரும் தனித்தனியாக இது குறித்து கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி அன்னூரை அடுத்த நீலகண்டன் புதூரை சேர்ந்த சேகர் ( வயது 31 )என்பவரை கைது செய்தனர். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..