40,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி உலக சாதனை படைத்த ‘பாடும் நிலா’ எஸ்.பி.பி-யின் நினைவாக, கேரள மாநிலம் பாலக்காட்டில் அவரது முழு உருவச்சிலை நேற்று திறந்து வைக்கப்பட்டது.கண்ணூர் பய்யன்னூரைச் சேர்ந்த பிரபல சிற்பி கானாயி உன்னி இந்தச் சிலையை வடிவமைத்துள்ளார். சுமார் 10 அடி உயரம் கொண்ட இந்தப் பிரம்மாண்ட சிலை, கண்ணாடி உலோகத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. ...

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, சுங்கச்சாவடிகளில் நெரிசலைக் குறைக்கவும் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் ரொக்கப் பணம் வாங்கும் முறை அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் புதிய அறிவிப்பின்படி, ஏப்ரல் 1முதல் தமிழகம் முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் உள்ள மொத்தம் 77 சுங்கச்சாவடிகளில், 66 சுங்கச்சாவடிகளில் இந்த புதிய ...

இந்தோனேசியாவை சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியிருக்கிறது. ரிக்டர் அளிவல் 7.8 என நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது. இந்தோனேசியாவின் டெர்னேட் அருகே வடக்கு மொலுக்கா கடலில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. எனவே, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வு அண்டை நாடுகளில் சுனாமி ...

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் இப்போது டிஜிட்டல் உலகையே அதிரவைக்கும் நிலைக்குச் சென்றுள்ளது. பஹ்ரைனில் உள்ள அமேசான் நிறுவனத்தின் தலைமையகம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் அமேசான் வெப் சர்வீஸ் பிரிவின் கீழ் இயங்கும் ‘படெல்கோ’ நிறுவனத்தின் கட்டிடம் பலத்த சேதமடைந்துள்ளது. முன்னதாக, ஏப்ரல் ...

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, அரசு மதுக்கடைகளுக்கு ஏப். 21 முதல் 23 ஆம் தேதி வரையும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 4-ஆம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் சுதந்திரமான, நியாயமான, அமைதியான மற்றும் சுமுகமாக தோ்தல் நடைபெறுவதை உறுதி செய்யும் நோக்கில் ஏப். 21 காலை ...

இன்றைய அவசரமான வாழ்க்கை முறை, முறையற்ற உணவுப் பழக்கம், அதிகரித்து வரும் மன அழுத்தம் மற்றும் சுற்றுச்சூழல் மாசு போன்ற காரணங்களால், இளம் வயதிலேயே பலருக்கு நரை முடி ஒரு பொதுவான பிரச்சனையாக மாறியுள்ளது.முன்னர் முதியவர்களுக்கே காணப்பட்ட இந்த நரை முடி, இப்போது 20-30 வயதிலேயே தோன்றுவதால் இளைஞர்களிடையே கவலை அதிகரித்து வருகிறது. இதை மறைக்க ...

ஈரானின் ஆதரவு பெற்ற ஈராக் ஆயுதக்குழு, பாக்தாத்தில் உள்ள அமெரிக்காவின் விக்டோரியா ராணுவ தளத்தின் மீது சற்றுமுன் தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நீடித்து வரும் மேற்காசிய போரால், கச்சா எண்ணெய் தொடர் உயர்வை சந்தித்து வருகிறது. இன்று அதிகாலை குவைத் சர்வதேச விமான நிலையத்தை ஈரான் தாக்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஈராக் ...

சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. ரூ.2043.50 ஆக இருந்த வணிக சிலிண்டர் விலை ரூ.2,246.50 ஆக உயர்ந்துள்ளது. மேற்காசிய போர் காரணமாக எரிவாயு சிலிண்டர் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவும் விலையில் விலை உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. சர்வதேச சந்தையில் ...

சீ​னா​வில் தயாரிக்​கப்​பட்ட சிசிடிவி கேம​ராக்​களை நாளை முதல் விற்​பனை செய்ய மத்​திய அரசு தடை விதித்துள்ளது. இந்​தி​யா​வில் விற்​பனை செய்​யப்​படும் சிசிடி​வி. கேம​ராக்​களில் மூன்​றில் ஒரு பங்கு சீனா தயாரிப்​பு​கள் ஆகும். குறிப்​பாக ஹிக் விஷன், தகுவா மற்​றும் டிபி-லிங்க் போன்ற சீன நிறு​வனங்​களின் தயாரிப்​பு​கள் இந்​திய சந்​தை​யில் அதி​கள​வில் விற்பனையாகின்றன. இந்​நிலை​யில், சிசிடிவி கேம​ராக்​களின் ...

ரேஷன் கார்டு என்பது வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு அரசு தரப்பிலிருந்து வழங்கப்படும் அட்டை ஆகும். தமிழகத்தில் உள்ள 39 மாவட்டங்களில் மொத்தமாக 35,083 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் 2 கோடியோ 25 லட்சத்து 24 ஆயிரத்து 784 குடும்ப அட்டைகள் உள்ளன. இதன் மூலம் 7 கோடிக்கும் மேற்பட்ட ...