பெண்ணிடம் பூஜை நடத்துவதாக 3 பவுன் செயின் மோசடி-போலி ஜோதிடருக்கு வலை..!

பெண்ணிடம் பூஜை நடத்துவதாக 3 பவுன் செயின் மோசடி-போலி ஜோதிடருக்கு வலை..! கோவை குனியமுத்தூர் பக்கம் உள்ள நரசிம்மபுரம் குமரன் கார்டனை சேர்ந்தவர் காந்தி இவரது மகள் அகிலா ( வயது) 25 நேற்றுஇவரது வீட்டுக்கு ஒரு ஆசாமி வந்தார். அவர் தனக்கு ஜோதிடம் தெரியும் என்று கூறினார்.உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. பூஜை மூலம் அந்த ஆபத்தை சரி செய்து விடுவேன் என்று கூறினார்.,இதை நம்பியஅகிலா அந்த போலி ஜோதிடரை வீட்டுக்குள் வரவழைத்தார ..தேங்காய் பழம்| ஊதுபத்தி வாங்கி வந்து சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்தார்.அகிலாவை பூஜையில் முன் உட்கார வைத்தார். பின்னர் அவர்அணிந்திருந்த 3பவுன் செயினை டம்ளரில் வைத்த தண்ணீருக்குள் போடுமாறு கூறினார்.பிறகு அகிலா அவர் அணிந்திருந்த 3பவுன் செயினை அந்த டம்ளருக்குள் கழட்டி போட்டார்.ஒரு மணி நேரம் கண்களை மூடி சுவாமியை நினைத்து தியானம் செய்யுமாறு கூறினார்.ஒரு மணி நேரம் கழித்து பார்த்த போது அந்த ஆசாமியை காணவில்லை.டம்ளருக்குள் போட்ட 3 பவுன் செயினுடன் போலி ஜோதிடர் தப்பி ஓடிவிட்டார்.இதுகுறித்து அகிலா குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து போலி ஜோதிடரை தேடி வருகிறார்கள்.