குடிபோதையில் மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது..

கோவை போத்தனூர் ,சாரதா மில் ரோடு, முதலியார் வீதியைச் சேர்ந்தவர் விக்ரமன் (வயது 62 ) இவரது மனைவி சுசிலா (வயது 58) விக்ரமன் குடிப்பழக்கம் உடையவர் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்வார். இந்த நிலையில் நேற்று இரவு சுசிலா வீட்டை பூட்டிவிட்டு தூங்கினார்.அப்போது குடி போதையில் வந்த விக்ரமன் கதவை தட்டினார்.மனைவி சுசிலா கதவை திறக்கவில்லை. தொடர்ந்து கதவு தட்டிக் கொண்டு இருந்தார். நீண்ட நேரத்துக்கு பிறகு அவர் கதவை திறந்தார். அப்போது ஆத்திரமடைந்த விக்ரமன் மனைவி சுசிலாவை கத்தியால் குத்தினார் . இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இது குறித்து போத்தனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விக்கிரமனை கைது செய்தனர். இவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.