ஒரே நாளில் கல்லூரி மாணவி, 2 பெண்கள் திடீர் மாயம்..!

கோவை : கேரள மாநிலம் பாலக்காடு பக்கம் உள்ள கஞ்சி கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் .அவரது மகள் சாராரின்சி ( வயது 18) இவர் பீளமேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.கடந்த 23ம் தேதி ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு செல்லவில்லை. எங்கோ மாயமாகி விட்டார் .இது குறித்து அவரது தாயார் ரோசினா நிஷா பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

இதே போல கோவை கணுவாய் வ உ சி நகரை சேர்ந்தவர் பரமசிவம் அவரது மகள் அர்ச்சனா ( வயது 29) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 21 ஆம் தேதி சத்தியமங்கலத்தில் தனது தோழி திருமண விழாவிற்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டுச் சென்றவர் .வீடு திரும்பவில்லை. இது குறித்து வடவள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள் .

கணபதி சின்னச்சாமி நகரைச் சேர்ந்தவர் குமரேசன். அவரது மனைவி மகாலட்சுமி (வயது 30)கட்டிட வேலைக்கு சென்று வந்தார். அப்போது மேஸ்திரி மூர்த்தி என்பவருடன் நெருங்கி பழகி வந்தாராம். இந்த நிலையில் கடந்த 23ஆம் தேதி வேலைக்குச் சென்ற மகாலட்சுமி வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகி விட்டார். அவர் மேஸ்திரிமூர்த்தியுடன் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கபடுகிறது .இது குறித்து அவரது கணவர் குமரேசன் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..