கோவை சுண்டக்காமுத்தூர் குளத்தில் மிதந்து வந்த பெண் சடலம் மீட்பு..

கோவை சுண்டக்காமுத்தூர் குளத்தில் பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சுண்டக்காமுத்தூர் பெரியகுளத்தில் சடலம் மிதப்பதாக பேரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் சென்று பார்த்த போது குளத்தின் ஒரு ஓரத்தில் பெண்ணின் சடலம் மிதந்தது தெரியவந்தது.
இதையடுத்து, தீயணைப்பு துறையினருடன் இணைந்து பெண்ணின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல் துறை விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் சுண்டாக்காமுத்தூரை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரின் மனைவி கமலாதேவி என்றும் குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் போலீசார் தெரிவித்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.