புத்தாண்டில் ஒட்டலுக்குள் அனுமதிக்க மறுத்த ஊழியருக்கு அடி- உதை…

கோவை ரேஸ் கோர்சில்” ஒட்டல் பப்பீஸ் ” என்ற ஆடம்பர ஓட்டல் உள்ளது .இங்கு புத்தாண்டு தினத்தை ஒட்டி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதில் பங்கேற்க சிவப்பிரசாத் என்பவர் தனது நண்பர்களுடன் அந்த ஓட்டலுக்கு சென்றார்.அரங்கத்தில் இடமில்லை நாளைக்கு வாருங்கள் என்று ஓட்டல் ஊழியர் பிரபாகரன் கூறினார்.அதற்கு அந்த கும்பல் அவரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியது.இது குறித்து ஓட்டல் மேனேஜர் பார்த்திபன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார் .போலீசார் சிவபிரசாந்த் உட்பட அவரது நண்பர்கள்மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..