தாயாருக்கு போன் செய்துவிட்டுகாதலனுடன் இளம்பெண் ஓட்டம்…

கோவை கவுண்டம் பாளையம் அருகே உள்ள இடையர்பாளையம், சிம்சன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ்.இவரது மகள் ஆஷிஷா (வயது 26) சென்னையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார் .இவர் திருமணமான ஒருவருடன் காதல் வைத்து இருந்தாராம்.புத்தாண்டு தினத்தில் ஆஷிஷாவை திடீரென்று காணவில்லை. ‘இந்த நிலையில் தனது தாயிடம்செல்போனில் பேசிதன் காதலனை திருமணம் செய்து கொள்ளபபோகிறேன். தேடவேண்டாம் என்று கூறிவிட்டு எங்கோ மாயமாகிவிட்டார். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது இது குறித்து தாயார் தெய்வானை கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.