திருச்சியில் நடந்த பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இந்திய பிரதமர் மோடி பேசும்போது புத்தாண்டில் முதல் நிகழ்ச்சியாக இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி. அழகான தமிழ்நாட்டிலும், இங்கு ஒரு பட்டமளிப்பு விழாவிற்கு வரும் பாக்கியம் பெற்ற முதல் பிரதமர் நான் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இந்த முக்கியமான தருணத்தில் பட்டம் பெறும் மாணவர்கள், ...
திருச்சி பன்னாட்டு விமான நிலைய திறப்பு விழாவில் தமிழக முதல்வர் பேசும்போது தொட்ட துறை அனைத்திலும் சிகரத்தை தொட்ட மாநிலமான தமிழ்நாடு இந்தியத் திருநாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் முக்கியப் பங்காற்றி வருகிறது. அப்படிப்பட்ட நம்முடைய தமிழ்நாட்டின் இதயப்பகுதியாக இருக்கும் திருச்சிராப்பள்ளியின் பன்னாட்டு விமான நிலையத்தில், ஆயிரத்து 112 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டிருக்கும் புதிய முனையத்தை” ...
எதிர்வரும் 4.1.2024ம் தேதி ஒன்றிய அரசுக்கு எதிராக திண்டுக்கல்லில் நடைபெறும் ஆர்பாட்டத்திற்கு சிறுத்தைகள் பெரும்திரளாக கலந்துகொள்ள வேண்டும் பெ.ச.உலக நம்பி அழைப்பு. ஜனவரி 4 ல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த மாநாடு சம்பந்தமாக மாவட்ட வாரியாக ஆர்ப்பாட்ட ஒருங்கிணைப்பாளரை தொல். திருமாவளவன் அறிவிப்பு செய்துள்ளார். திண்டுக்கல் ...
சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க மாநிலம் முழுவதும் டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் மேற்பார்வையில் அனைத்து மாநகர கமிஷனர்கள், 4 மண்டல ஐஜிக்கள், டிஐஜிக்கள், 38 மாவட்ட எஸ்பிக்கள் தலைமையில் 1.20 லட்சம் போலீசார் நேற்று முன்தினம் முதல் நேற்று அதிகாலை வரை விடவிடாமல் ...
திருச்சி: இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு. கல்வியில் சிறந்த என்று எந்த பட்டியல் எடுத்தாலும் இதில் தமிழ்நாடு கல்வி நிறுவனங்கள் தான் அதிகமாக இடம்பெற்று இருக்கும் என்று பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின் பேசினார். திருச்சி பாரதிதாசன் பலகலைக்கழகத்தில் 38வது பட்டமளிப்பு விழா நடக்கிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக ...
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 5 நாட்கள் பயணமாக ரஷ்யா சென்று உள்ள நிலையில் அங்கு அவர் ரஷ்ய துணை பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் அமைப்பது குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதனை அடுத்து அவர் அதிபர் புதினை சந்தித்த நிலையில் பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு ...
புதுடெல்லி:ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் அபுதாபிக்கு அருகில் உள்ள முர்ரேகாவில் 55,000 சதுர மீட்டர் பரப்பளவில் பிரம்மாண்டமான இந்து கோவில் கட்டப்பட்டு வருகிறது. பிரதம மந்திரி நரேந்திர மோடி இந்த கோவிலின் கட்டுமானத்தை பிப்ரவரி 2018-ல் தொடங்கி வைத்தார். அபுதாபி கோவிலையும் பாப்ஸ் அமைப்பு சார்பில் கட்டுகிறது, இது உலகம் முழுவதும் சுமார் 1,200 இந்து ...
ஜப்பான் நாட்டின் ஹொன்ஷு தீவுகள் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேற்று எற்பட்டது. அடுத்தடுத்து 7.2 ரிக்டர் முதல் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாலும் அவை கடலுக்கு அடியில் மையம் கொண்டிருந்ததாலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி காலை 12.40 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக ஐரோப்பிய நில அதிர்வு ...
பஞ்சாபை சேர்ந்தவர் லக்பீர் சிங் லண்டா, 33. தடை செய்யப்பட்ட காலிஸ்தான் இயக்கத்துடன் தொடர்புடைய, சர்வதேச பாபர் கல்சா அமைப்பில் உள்ளார். இந்நிலையில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கோல்டி பிராரை பயங்கரவாதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இவர் சத்வீந்தர் சிங் மற்றும் சத்தீந்தர்ஜித் சிங் என்ற பெயர்களாலும் அறியப்படுகிறார். சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் ...
லாகூர்: பாகிஸ்தானில் இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை வகுப்பு அமைப்பான ரா நிதி உதவியுடன் பலுசிஸ்தான் தீவிரவாதிகள் 80, 90 கொலைகளை நிகழ்த்தி உள்ளனர் என பாகிஸ்தானின் இடைக்கால பிரதமரான அன்வர் உல் ஹக் காகர் பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார். பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான்கான் மீது ஊழல் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இம்ரான்கானுக்கு ...













