கோவை: மேட்டுப்பாளையம்-காரமடை சாலையில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகில் வளர்ப்பு பிராணிகள் கடை ஒன்று உள்ளது. இங்கு அனுமதியின்றி பவளப்பாறைகள் விற்பனை செய்யப்படுவதாக மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரினம் குற்றக்கட்டுப்பாட்டு பிரிவு படையினர் மூலம் மேட்டுப்பாளையம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது ...

கோவை: வடகோவை-பீளமேடு ரெயில்வே தண்டவாளம் ரத்தினபுரி பாலம் அருகே 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயில் மோதி இறந்து கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ...

கோவை செல்வபுரம் வடக்கு அடுக்கு மாடி குடியிருப்பை சேர்ந்தவர் மாசானம் (வயது 30). கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மாசானம் அவரது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். அப்போது கல்லமேடு பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் மாசானத்திற்கு ...

பொள்ளாச்சி: தமிழக சுற்றுலா வளர்ச்சித்துறை சார்பில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சர்வதேச வெப்பக்காற்று பலூன் திருவிழா நடத்தப்படுகிறது. பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் விடுமுறை நாட்களான இன்று முதல் வருகிற 15-ந்தேதி வரை பலூன் திருவிழா நடக்கிறது. பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் உள்ள தனியார் மைதானத்தில் இன்று காலை பலூன் திருவிழா தொடங்கியது. நிகழ்ச்சியில் பிரான்ஸ், ஜெர்மனி, பிரேசில், ...

கோவை: பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இதைடுத்து கோவை கடைவீதிகளில் பொங்கல் பொருட்கள் விற்பனை களைகட்ட தொடங்கியுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர், திருச்சி மாவட்டம் மணப்பாறை, சேலம் மாவட்டம் மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கரும்பு கட்டுகள் டன் கணக்கில் கோவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதுகுறித்து ஆர்.எஸ் புரம் பூ மார்க்கெட் பகுதியில் ...

கோவையில் ரேஸ்கோர்ஸ், அரசு ஊழியர்கள் குடியிருப்பு, பங்களாக்கள் உள்ளிட்ட இடங்களில் சந்தன மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த சில நாட்களாக கோவை நகரில் பல இடங்களில் சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்தி சென்றனர். குறிப்பாக பாதுகாப்பு மிகுந்த ரேஸ்கோர்ஸில் உள்ள கலெக்டர் பங்களாவில் சந்தனமரம் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ...

கோவை பீளமேட்டை சேர்ந்த 24 வயது வாலிபர் ஒருவர் நேற்று அவினாசி ரோட்டில் உள்ள பியூட்டி பார்லருக்கு சென்றார். அப்போது அங்கிருந்தவர் இங்கு அழகான இளம்பெண்கள் உள்ளனர். நீங்கள் விருப்பப்பட்டால் அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என கூறி விபசாரத்திற்கு அழைத்தார். இதுகுறித்து அந்த வாலிபர் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் ...

கோவை மாவட்டம், வால்பாறையில் இருந்து கேரள மாநிலம், சாலக்குடி செல்லும் வழி முற்றிலும் அடா்ந்த வனப் பகுதியாகும். இந்த வனத்தில் ஏராளமான யானைகள் உள்ளன. யானைகள் கூட்டமாக சாலைக்கு வந்து வாகனங்களை வழிமறிப்பது அவ்வப்போது நடந்து வருகிறது.இந்த நிலையில் கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், சாலக்குடி-வால்பாறை ரோட்டில் யானைகள் தனித்தனி கூட்டமாக வனப்பகுதியில் முகாமிட்டுள்ளது. அதில் ...

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் கோவையை சேர்ந்த பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபீக் கொண்டாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.அதன் படி கோவை பேரூர் ஆதின வளாகத்தில் பேரூராதினம் மருதாசல அடிகளாருடன் இணைந்து கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மத போதகர்கள் இணைந்து நடத்திய பொங்கல் விழா நடைபெற்றது.இதில் இஸ்லாமிய ...

கோவை பீளமேடு அடுத்த நேரு நகர் பகுதியில் சேர்ந்தவர் செந்தில்குமார் என்பவரின் மனைவி சரஸ்வதி (33). இவருக்கு சொந்த ஊர் தர்மபுரி. சரஸ்வதி அவரது கணவர் செந்தில்குமாரும் கட்டிட தொழிலாளியாக பணி புரிந்து வருகின்றனர். இவரது வீட்டின் அருகில் வசித்து வருபவர் சுடலைக்கண்ணு (42) என்பவர் வீட்டின் உரிமையாளர் ராமசாமியிடம் சரஸ்வதியின் வீட்டிற்கு அடிக்கடி மர்ம ...