கிருஷ்ணகிரி அருகே தனது பூர்வீக கிராமத்தில் பெற்றோருக்கு சிலை வைத்து நினைவகம் அமைத்துள்ள நடிகர் ரஜினிகாந்த், கிராம மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை , இலவசமாக வழங்கி வருகிறார். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமம் நாச்சிக்குப்பம். நடிகர் ரஜினிகாந்த் மூதாதையர்கள், பெற்றோர்கள் இக்கிராமத்தில் வாழ்ந்துள்ளனர். இன்றைக்கும் ரஜினியின் உறவினர்கள், இக்கிராமத்தில் வசித்து வருகின்றனர். தற்போதும், ...

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்கள் செல்லும் என தனி நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதனைத் தொடர்ந்து அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்தும், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை ...

ரம்ஜான் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு வார சந்தைகளில் ஆடுகள் விற்பனை களைகட்டியது. தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. ரம்ஜான் என்றாலே நினைவுக்கு வருவது பிரியாணி தான். ஒரு மாதம் காலம் நோன்பு கடைபிடித்து வரும் இஸ்லாமியர்கள் இந்த நாளில் விரதத்தை முடித்து அசைவ உணவு எடுத்துக்கொள்வர். இதனையொட்டி இறைச்சிக்காக தமிகம் ...

டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து எலோன் மஸ்க் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். குறிப்பிட்ட வார்த்தைகள் மட்டுமே எழுத முடியும் என்ற அளவை, அதிகப்படுத்தியிருக்கும் அவர் ப்ளூ டிக் என்ற சப்ஸ்கிரிப்சனை சந்தாவாக மாற்றியுள்ளார். இதற்கு முன்பு ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் பிரபலங்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு ப்ளூ டிக் என்ற அம்சம் டிவிட்டரில் இலவசமாக ...

கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பாக, கைதான ஏழு பேர் மீது, என்ஐஏ அதிகாரிகள், பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், அக்.23 ல் கார் குண்டு வெடிப்பு நடந்தது. இதில், அதே பகுதியை சேர்ந்த, ஐ.எஸ். பயங்கரவாதி ஜமேஷா முபீன் பலியானார். போலீஸ் ...

சிறுவாணி ஆற்றின் குறுக்கே மூன்று இடங்களில் கேரள அரசு தடுப்பணைகள் கட்டி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், கோவை மக்களுக்கு குடிநீர் பஞ்சம் அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டு உள்ளது. கோவை மக்களுக்கு சிறுவாணி, பவானி, அத்திக்கடவு உள்ளிட்ட நீராதாரங்கள் வாயிலாக குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சி மற்றும் வழியோர கிராமங்களுக்கு ...

கோவை அருகே நள்ளிரவில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்தது. இதை அப்பகுதி மக்களும், வனத்துறையினரும் சேர்ந்து வனத்திற்குள் விரட்டினர். கோவை மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் நஞ்சுண்டாபுரம் கிராமம் அமையுள்ளது. இந்நிலையில் நள்ளிரவு வனப்பகுதியில் இருந்து குட்டியானைகளுடன் வெளியேறிய காட்டு யானை கூட்டம் கிராமத்தின் சாலைகளில் சுற்றித்திரிந்தன. யானைகள் ஊருக்குள் புகுந்த தகவல் அறிந்த பொதுமக்களும், வனத்துறையினரும் ...

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியைச் சேர்ந்தவர் கணேசன் டிரைவர். இவருடைய மனைவி நிவேதா இவர்கள் இரண்டு பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் சூலூரை அடுத்த பள்ளபாளையத்தில் வசித்து வந்தனர். இந்நிலையில் நிவேதா இன்னொரு வாலிபருடன் கள்ளக் காதலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதை அறிந்த கணேசன் நிவேதாவை ...

கோவை ஏப்20 புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 30)இவரது மனைவி நிவேதா (வயது 25 )இவர்கள் இருவரும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் ‘ஒருமகள் உள்ளனர். தற்போது இவர்கள் சூலூரை அடுத்த பள்ளபாளையத்தில் உள்ள கோவிந்தசாமி தேவர் வீதியில் வசித்து வருகிறார்கள் . ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் பிளஸ் 2 படித்து வந்தார். பின்னர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்தார். இந்த நிலையில் அந்த சிறுமிக்கும் சூலக்கல்லை சேர்ந்த ஜோஸ்வா ( வயது 23) என்பவருக்கும் பழக்கம் ...