பிளஸ் 2 மாணவியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் – போக்சோவில் வாலிபர் கைது..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் பிளஸ் 2 படித்து வந்தார். பின்னர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்தார். இந்த நிலையில் அந்த சிறுமிக்கும் சூலக்கல்லை சேர்ந்த ஜோஸ்வா ( வயது 23) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது .நாளடைவில் இது காதலாக மாறியது. இதற்கிடையில் சிறுமியின் வீட்டிற்கு சென்று ஜோஸ்வா ஆசைவாரத்தை காட்டி அவரை பாலியல் பலாத்காரம் செய்தாராம். இதுகுறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதன் பேரில் போலீசார் ஜோஸ்வா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நேற்று கைது செய்தனர்.