கள்ளக்காதலை கைவிட மறுத்த மனைவியை கத்தியால் குத்தி படுகொலை செய்த கணவர் கைது – கோவையில் அதிர்ச்சி..!

கோவை ஏப்20 புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 30)இவரது மனைவி நிவேதா (வயது 25 )இவர்கள் இருவரும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் ‘ஒருமகள் உள்ளனர். தற்போது இவர்கள் சூலூரை அடுத்த பள்ளபாளையத்தில் உள்ள கோவிந்தசாமி தேவர் வீதியில் வசித்து வருகிறார்கள் . நிவேதா அந்த பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். அங்கு பணிபுரிந்த ஒருவருடன் நிவேதாவுக்கு காதல் ஏற்பட்டது. இதனை அறிந்த கணேசன் தனது மனைவி நிவேதாவிடம் அந்த நபருடன் காதலை கைவிடும்படி கூறியுள்ளார்.அதை ஏற்க நிவேதா மறுத்தார். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில நேற்று மதியம் வீட்டிற்கு வந்த கணேசன் தனது மாமியாரிடம்,குழந்தைகளுக்கு கூல்டிரிங்ஸ் வாங்கி கொடுக்குமாறு வெளியே அனுப்பி வைத்துள்ளார். அவர்கள் சென்றதும் குடிபோதையில் இருந்த கணேசன் தனது மனைவி நிவேதாவை கத்தியால் கழுத்தில் இருதடவை குத்தினார். இதில் நிலைகுலைந்த நிவேதாஅதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன்,|சப் இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்தர் பிரசாத், வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கணேசனை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் மனைவியை குத்தி கொலை செய்ததாக கணேசன் கூறினார் .இதை தொடர்ந்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கணேசனை கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட கணேசன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.கள்ளக்காதல் தகராறில் மனைவி கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.