பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 பேர் பலி – 3 பேர் படுகாயம்..

கோவை- பாலக்காடு மெயின் ரோட்டில் உள்ள குளத்துப்பாளையம் ரோடு சந்திப்பில் நேற்று இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் ஒரு பைக்கில் பின்னால் இருந்து வந்த கோவை புதூர் அறிவொளி நகரை சேர்ந்த முருகேசன் மகன் கோபிநாத் (வயது 20)மற்றொரு பைக் ஓட்டி வந்த குளத்துப்பாளையம் கே.பி.ஆர் .காலனியை சேர்ந்த கருப்பசாமி (வயது 51 ) ஆகியோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தனர். பைக்கில் பின்னால் இருந்த ராஜேஷ்குமார் ( வயது 34) மற்றொரு பைக் ஓட்டி வந்த மாச்சம் பாளையம் உசேன் (வயது 22)பின்னால் இருந்து வந்த சல்மான் (வயது 19)ஆகியோரும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனை சேர்க்கப்பட்டுள்ளனர் . இதுகுறித்து ராஜேஷ் குமார் கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்தார். போலீசார் மற்றொரு பைக் ஓட்டி வந்த மாச்சம்பாளையம், செங்கப்ப கோனார் வீதியைச் சேர்ந்த உசேன் ( வயது 22 )என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..