கோவை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் துணிகர திருட்டு..!

கோவை ராமநாதபுரத்தில் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு கடந்த 29ஆம் தேதி இரவில் யாரோ மர்ம நபர்கள் உள்ளே புகுந்து கம்யூட்டர் அறையின் பூட்டை உடைத்து அங்கிருந்த 6 பேட்டரிகளை திருடி சென்று விட்டனர். இது குறித்து பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் ரவி ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.