தடுப்பு சுவரில் பைக் மோதி வாலிபர் பரிதாப பலி – நண்பர் படுகாயம்..

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி .அவரது மகன் சத்திய நாராயணன் (வயது 22 )நேற்று இவர் அதை ஊரைச் சேர்ந்ததனது நண்பர் விஜிஸ் ( வயது 20)என்பவருடன் துடியலூர்- மேட்டுப்பாளையம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். பைக்கை சத்யநாராயணன் ஓட்டினார்.துடியலூரில் உள்ள ஒரு வங்கியின் முன் சென்றபோதுஎதிர்பாராத விதமாக ரோட்டில் உள்ள தடுப்பு சுவரில் பைக் மோதியது. இதில் இருவரும் கீழே விழுந்தனர். சத்தியநாராயணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். பின்னால் இருந்த விஜிஸ் படுகாயத்துடன் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து கோவை மேற்கு பகுதி போக்குவரத்துபுலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.