கோவை வனப்பகுதியில் கர்ப்பிணி யானை உயிரிழப்பு..

கோவை வனக் கோட்டம் போளுவாம்பட்டி வனச்சரகம் நரசிபுரம் பிரிவு பகுதியில் வனப்பணியாளர்கள் நேற்று ரோந்து சுற்றி வந்தனர். அப்போது கிணத்துகுழி ஓடை, தடுப்பணைக்குள் பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது, இதைத்தொடர்ந்து கோவை வன கோட்ட உதவி வன பாதுகாவலர் செந்தில்குமார் போளுவாம் பட்டி வனச்சரக அலுவலர் சுசீந்திரநாத் மற்றும் வனப் பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர் அவர்கள் முன்னிலையில் ஆனைமலை புலிகள் காப்பக வன கால்நடை டாக்டர் சுகுமார்|நரசிபுரம் உதவி கால்நடை டாக்டர் கார்த்திகேயன்ஆகியோர் இந்தப் பெண் யானையை உடற் கூறுஆய்வுசெய்தனர். அந்த கர்ப்பிணி யானைக்கு 22 முதல் 25 வயது இருக்கலாம்…அந்த யானை இறந்து 2 நாட்கள் ஆகி இருக்கலாம். இறந்த யானையின் கர்ப்பப்பையில் 20 முதல் 22 மாதமாக சிசு இருந்துள்ளது. சினைப்பை பிரச்சனை காரணமாக யானை இறந்திருக்கலாம் என்று கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர்..