பெற்றோர் கண்டித்ததால் பீகார் இளம்பெண் தற்கொலை..

கோவை : பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் கருராஜ்பான்சி. சூலூர் பக்கம் உள்ள மயிலம்பட்டியில் குடும்பத்துடன் தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகிறார்.இவருக்கு 3மகள்கள் உள்ளனர்.இவரது மகள் சிந்து குமாரி (வயது 16) நேற்று மாலையில் இவரது பெற்றோர்கள் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தனர். அப்போது சிந்து குமாரி வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தார் . இதை பார்த்த பெற்றோர்கள் அவரை கண்டித்தனர். இதனால் மனம் உடைந்த சிந்து குமாரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.