சென்ட்ரிங் சீட் திருடிய மாணவரை கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைப்பு..!

கோவை துடியலூர் பக்கம் உள்ள உருமாண்டம் பாளையத்தை சேர்ந்தவர் நாகநாதன் (வயது 41) பில்டிங் காண்டிராக்ட் தொழில் செய்து வருகிறார்.இவர் சரவணம்பட்டி பக்கம் உள்ள நஞ்சே கவுண்டன் புதூர் பகுதியில் கட்டிடம் கட்டி வருகிறார்.இதற்காக இங்குள்ள ஒரு அறையில் 37 சென்ட்ரிங் சீட்டுகள் வைத்திருந்தார்.அதை நள்ளிரவில் ஒரு ஆசாமி திருடும்போது அவரை கையும் களவமாக பிடித்து சரவணம்பட்டி போலீசில் ஒப்படைத்தார்.போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் நஞ்சே கவுண்டன் புதூரை சேர்ந்த ராகுல் (வயது 18) என்பது தெரிய வந்தது. இவர் கோவையில் உள்ள ஒரு பாலிடெக்னிக்கல் டி. எம். இ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.