கோவில்களில் உண்டியல் திருட்டு – அதிர்ச்சியில் மலை கிராம பொதுமக்கள்

கோவில்களில் உண்டியல் திருட்டு – அதிர்ச்சியில் மலை கிராம பொதுமக்கள்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தாலுகா, பண்ணைக்காடு பேரூராட்சியில் பல ஆயிரம் கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு உள்ள ஆலடிப்படி அருள்மிகு கீழ் வெங்கடாசலபதி திருக்கோயில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், நேற்று இரவு கோவிலுக்கு உள் நுழைந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே இருந்து உண்டியலை தூக்கிச் சென்றனர். மற்றொரு கோவிலில் விநாயகர், சிவன், எம்பெருமான் உள்ள கோவிலின் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்று உள்ளனர். இது குறித்து இன்று அதிகாலை பூசாரிகள் முருகன், பாலசுப்பிரமணியன் இருவரும் அந்த, அந்த கோவிலுக்கு பூஜை செய்வதற்காக சென்ற போது பூட்டு உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இது குறித்து கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர். கோவில் நிர்வாகிகள் தாண்டிக்குடி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர். புகாரின் பேரில் கை ரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.