பொள்ளாச்சியில் டிவைடரில் பைக் மோதி வங்கி மானேஜர் பலி..

கோவை: பொள்ளாச்சி பக்கம் உள்ள சின்னம்பாளையம், சிற்பி நகரை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன்(வயது 31) பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் மானேஜராக வேலை பார்த்து வந்தார்.இவர் நேற்று பொள்ளாச்சி- பல்லடம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார் அப்போது ரோட்டில் வைக்கப்பட்டிருந்த டிவைடர் மீது பைக் மோதியது.இதனால் கீழே விழுந்து அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.அவரை சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார் .இது குறித்து அவரது தந்தை ராமசாமி மகாலிங்கபுரம் போலீசில் புகார் செய்துள்ளார் . சப் இன்ஸ்பெக்டர் இளையராஜா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.