கோவை வனப்பகுதியில் இறந்த நிலையில் குட்டி யானை – வனத்துறையினர் விசாரணை

கோவை வனப்பகுதியில் இறந்த நிலையில் குட்டி யானை – வனத்துறையினர் விசாரணை

 

கோவைஅட்டுக்கல் வனப்பகுதியில் இறந்த நிலையில் மீட்கப்பட்டஒரு மாத ஆண் குட்டி யானைக்கு இன்று கால்நடை மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

 

கோவை வனச்சரகம் கெம்பனூர் வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் நேற்று மாலை ரோந்துச் சென்றனர். அப்போது, அட்டுக்கல் அடர்வனப் பகுதியில் பிறந்து சுமார் 1 மாதமே ஆன ஆண் யானைக் குட்டி இறந்த நிலையில் கண்டறியப்பட்டது.

 

இதையடுத்து, அங்கு வனத்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், மாலை நேரம் ஆனதால், வன விலங்குகள் நடமாட்டம் கருதி, இன்று காலை கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

உடற்கூறு ஆய்வு முடிவிற்கு பிறகே யானை குட்டியின் உயிரிழப்புக்குகாரணம் தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

சிறுமுகை வனப்பகுதியில் சென்ற வாரம் 2 மாத ஆண் குட்டியானை சடலமாக கண்டறியப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, நேற்று அட்டுக்கல் வனப்பகுதியில் மீண்டும் ஒரு மாதமேயான ஆண் குட்டியானை இறந்த நிலையில் கண்டிடுக்கபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வனச் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தொடரும் யானை இறப்புகள்வனத்துறையினர் மற்றும் வன ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.