வால்பாறையில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பாக விழிப்புணர்வு

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பாக நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பேரணி மூலம் எடுத்துரைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது . இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வால்பாறை நகர்மன்ற தலைவர் எஸ். அழகு சுந்தரவள்ளி செல்வம், நகராட்சி ஆணையாளர் பாலு ஆகியோர் கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தனர். இதில் வால்பாறை அரசு கல்லூரி பேராசிரியர்கள், நகராட்சி மேற்பார்வையாளர்கள், கல்லூரி மாணவ மாணவியர்கள், நகராட்சி பணியாளர்கள் மற்றும் அனைவரும் கலந்து கொண்டனர்..