ஆட்டோ கவிழ்ந்து விபத்து – டிரைவர் பரிதாப பலி..

கோவை அருகே உள்ள கீரணத்தம், சிவசக்தி கார்டனை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 62) ஆட்டோ டிரைவர்.இவர் நேற்று பொள்ளாச்சி- மீன்கரை ரோட்டில் ஆட்டோ ஓட்டிச் சென்றார். அப்போது திடீரென்று திடீரென்று நிலை தடுமாறி ஆட்டோ கவிழ்ந்தது. இதில் ஜெயக்குமார் படுகாயம் அடைந்தார் . சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார். இது குறித்து அவரது மனைவி பொள்ளாச்சி மேற்கு பகுதி போலீசில் புகார் செய்தார்.இன்ஸ்பெக்டர் மணிக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..