கர்நாடகா சட்டசபை தேர்தல்… அடுத்த முதல் – மந்திரி யார்..? எச்டி குமாரசாமியின் படத்தை எடுத்த பைரவா நாய்.!!

வருகிற 10-ஆம் தேதி கர்நாடக சட்டசபைக்கு பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. எட்டாம் தேதி வரை இதற்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில் தற்போது வேட்பாளர்கள் அனைவரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அடுத்த முதல் மந்திரி யார் ஆட்சியைப் பிடிப்பது எந்த கட்சி என்ற கருத்துக்கணிப்புகள் கர்நாடகாவில் வர தொடங்கியுள்ளது. தேர்தல் சமயத்தில் அரசியல் கட்சியினர் வேட்பாளர்கள் ஜாதகம் பார்த்து வெற்றி தோல்வியை கணிப்பது வழக்கம்.

அந்த வகையில் மாந்தியாவில் உள்ள ஒரு நாய் எதிர்காலத்தை சொல்கிறது. அது இதுவரை கூறிய கணிப்புகள் பொய்யல்ல என அந்த பகுதியில் உள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த நாயை மாண்டியாவை சேர்ந்த கோபி என்பவர் வளர்த்து வருகிறார். பைரவரின் பெயரையே இந்த நாய்க்கு அவர்கள் சூடியுள்ளனர். கடந்த இரண்டு வருடங்களாக இந்த பைரவா நாயின் கணிப்புகள் உண்மையாகி வருவதாக நம்பிக்கை நிலவி வருகிறது. இந்நிலையில் கர்நாடக முதல் மந்திரி யார் என பைரவா நாய் மூலம் கணிக்க திட்டமிட்டுள்ளார்.

இதற்கான சிறப்பு பூஜைகள் நடைபெற்று நாய்க்கு வழிபாடு நடத்தப்பட்டது. அதன் பின் தற்போதைய முதல் மந்திரி பசவராஜ் பொம்மை முன்னாள் முதல் மந்திரி எஸ்டி குமாரசாமி மற்றும் டி கே சிவகுமார் ஆகியோரின் புகைப்படங்களை பைரவா முன்பு வைத்துள்ளார். இதனையடுத்து கோபி பைரவரிடம் இந்த முறை யார் முதல்வர் என கேட்டுள்ளார். அதில் பைரவா நாய் எச்டி குமாரசாமியின் புகைப்படத்தை கவி எடுத்தது. இது குறித்து நாயின் உரிமையாளர் கூறியதாவது, இந்த நாய்க்கு சிறப்பு சக்தி உள்ளது பைரவா கணிப்பு நிறைவேறும் என்பது அவர்களின் நம்பிக்கை என தெரிவித்துள்ளார். இந்த சட்டசபை தேர்தலில் பைரவரின் கணிப்பு நிறைவேறுமா என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.