மதுவில் விஷம் கலந்து குடித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை..

கோவை ராமநாதபுரம்,கணேசபுரம் மருதாச்சலம் வீதியைச் சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் மணிகண்டன் (வயது 38) .ஆட்டோ டிரைவர் இவரது மனைவி சரண்யா (.வயது 30) இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சரண்யா கடந்த 6 மாதங்களாக கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் மணிகண்டன் பீளமேடு கொடிசியா ஆட்டோ ஸ்டாண்டில் மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும பலன் அளிக்காமல் நேற்று இறந்தார். இது குறித்து அவரது மனைவி சரண்யா பீளமேடு போலீசில் புகார் செய்தார் . போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.