பெண்ணிடம் குடிக்க தண்ணீர் கேட்பது போல் நடித்து 6 பவுன் செயின் பறிப்பு – பைக் ஆசாமி கைவரிசை..!

கோவை பீளமேடு,சேரன் மாநகர் பக்கம் உள்ள ராமசாமி நகர் ,சர்ச் ரோட்டை சேர்ந்தவர் சுரேஷ். அவரது மனைவி ஆரோக்கியமேரி (வயது 58)இவர் நேற்று மாலை அவரது வீட்டின் முன் உள்ள செடியில் பூ பறித்துக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு ஆசாமி வாகனத்தை விட்டு இறங்கி வந்து ஆரோக்கிய மேரியிடம் ஒரு முகவரியை கேட்டார். பின்னல் தாகமாக உள்ளது தண்ணீர் தாருங்கள் என்று கேட்டார். அந்த பெண் தண்ணீர் எடுக்க வீட்டினுள் சென்றார். அப்போது அந்த ஆசாமி பின் தொடர்ந்து சென்று ஆரோக்கிய மேரியின் கழுத்தில் கடந்த 6 பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து ஆரோக்கிய மேரி பீளமேடு போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்கு பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகிறார்..