கோவை புது சித்தாபுதூர் சி. கே .காலனி சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 62 )இவர் நேற்று அங்குள்ள ஐயப்பன் கோவிலுக்கு தனது குடும்பத்துடன் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு ஆசாமி ஆனந்தன் மனைவி கழுத்தில் கிடந்த செயினை பறித்தான். அவனை ஆனந்தன் மற்றும் அருகில் நின்றவர்கள் உதவியுடன் கையும் களவுமாக பிடித்து காட்டூர் போலீசில் ஒப்படைத்தார். ...

கோவை வெள்ளலூர் அருகே உள்ள மகாலிங்கபுரம்,.சதீஸ்வரர் நகரை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவரது மகள் மதுமிதா வயது 20 இவர் கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிகாம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். .கடந்த 17ஆம் தேதி கல்லூரிக்கு சென்ற மதுமிதா வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார் .இதுகுறித்து அவரது தந்தை புருஷோத்தமன் ...

நீலகிரி மாவட்டம், வெலிங்டன் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட மாரிமுத்து காலனியில் பசுமாடு ஒன்று அவுட்டுக்காயை கடித்தது. இதில் பசுமாட்டின் வாய்ப்பகுதி வெடித்து சிதறியது. இது தொடர்பாக வி.ஏ.ஓ. அருள்ரத்தினம் கொடுத்த புகாரின் பேரில் வெலிங்டன் போலீசாா் வெடி வைத்தல், விலங்குகளை துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனா். இந்நிலையில், ...

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள சோலூர் மட்டம் பகுதியை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் அனைத்தும் வனத்தையொட்டி இருக்கிறது. இதனால் இந்த பகுதிகளில் அடிக்கடி வனவிலங்குகள் புகுந்து விடுவதை வாடிக்கையாக வைத்துள்ளது. குறிப்பாக யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் கிரா மக்கள் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர். சோலூர் மட்டம் அருகே ...

கோவை வடவள்ளி, தொண்டாமுத்தூர் ரோட்டில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் அஸ்கிஸ் (வயது 33) இவர் காவியா ஜெயின் (வயது 29) என்பவரை 2 – 7 – 2021 அன்று 2-வது திருமணம் செய்து கொண்டார்.இவர் மனைவியிடம் வரதட்சணையாக 450 கிராம் தங்க நகைகள் வாங்கி இருந்தார்.இவர் குடிப்பழக்கம் உடையவர். சம்பவத்தன்று இவர் குடிபோதையில் ...

கோவை மாவட்டம் காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான திம்மம் பாளையம், திம்மம்பாளையம் புதூர், மருதூர், கணுவாய்பாளையம், தாயனூர், தோலம்பாளையம், வெள்ளியங்காடு ஆகிய பகுதிகளிலும் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை, தொண்டாமுத்தூர் ஆகிய பகுதிகளிலும் விவசாயம் பிரதான தொழிலாக செய்யப்பட்டு வருகிறது. இதில் வாழை, கறிவேப்பிலை பயிர்களையடுத்து விவசாயிகள் தக்காளி சாகுபடி அதிகமாக பயிரிடப்பட்டு வருகின்றனர். விவசாயிகள் ...

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வருகிற 31-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும், ஊர்வலம் நடத்தவும் அரசு தடை விதித்தது. சிலை வடிவமைப்பாளர்கள் இதனால் விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டது. பெரிய அளவிலான சிலைகளை தயாரிக்கவில்லை. ஒரு அடி முதல் 3 ...

கோவை பெரியநாயக்கன்பாளையம் சரகம், ஆனைகட்டி வடக்கு பீட், சீங்குளி பழங்குடியின கிராமம் அருகே கொடுந்துறைப்பள்ளம் ஆற்றங்கரையில் இரு மாநிலங்களுக்கு இடையான எல்லைப்பகுதியில் 8 வயது மதிக்கதக்க ஆண் யானை ஒன்று கடந்த 15-ந் தேதி தென்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற வனத்துறையினர், யானையின் உடல் நலம் குறித்து கண்காணிக்க தொடங்கினர். யானை உடல் நலம் ...

கோவை: சென்னை, ஆவடியை ரோட்டை சேர்ந்தவர் செண்பக பிரியா ( வயது 28) இவருக்கும் கோவை, பட்டணம் ,ரூபி அவென்யூவை சேர்ந்த மோகன்ராஜ் மகன் லோகேஷ் ( வயது 28) என்பவருக்கும் 3 -4-. 20 22 அன்று திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. -3 – 6 – 2022அன்று திருமணம் நடப்பதாக இருந்தது.இந்த நிலையில் ...

கோவை அருகே உள்ள கண்ணம்பாளையத்தைச் சேர்ந்தவர் வேலுமணி. இவரது மனைவி சுசித்ரா (வயது 49) இவர் நேற்று மாலை தனது வளர்ப்பு நாயுடன் கண்ணம்பாளையம் ரோட்டில் நடைபயிற்சி (வாக்கிங்) சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆசாமி திடீரென்று சுசித்ராவின் கழுத்தில் கடந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்தார். இதில் சுசித்ரா ...