குப்பைத் தொட்டியில் கிடந்த துண்டிக்கபட்ட ஆணின் கை – கோவையில் பரபரப்பு ..!

கோவை துடியலூர் அருகே உள்ள வி .கே.எல். நகர் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் ஒரு ஆணின் கைதுண்டிக்கபட்டு கிடப்பதாக குப்பை ஏற்றும் லாரி டிரைவர் சங்கர் கிளீனர் ஜெயபாண்டி ஆகியோர் துடியலூர் கிராம நிர்வாக அதிகாரி காட்டுத்துரையிடம் கூறினார்கள்.அவர் இது குறித்து துடியலூர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த கையை கைப்பற்றினார்கள்.அது 45 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணின் இடது கை ஆகும்.இந்த கை பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.சம்பவ இடத்தில் போலீஸ் துப்பறியும் நாய் விடப்பட்டது. அது யாரையும் பிடிக்கவில்லை.