கோவை டாஸ்மாக் பாரில் தகராறு : ஊழியருக்கு பீர் பாட்டில் குத்து- 6 பேர் கைது..!

கோவை: ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர் பாலு (வயது 37) இவர் கடந்த 2 மாதங்களாக கோவை காந்திபுரம் 7-வது வீதியில் (விரிவாக்கம்) உள்ள டாஸ்மாக் பாரில் ( எண் 1516)ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவில் 4 பேர் மது குடிக்க சென்றனர்.பார் ஊழியர்கள் கடை மூடப்பட்டு விட்டது. நாளைக்கு வாருங்கள் என்று கூறினார்கள்.இதனால் அவர்களுக்கும், பாலுவுக்கும் தகராறு ஏற்பட்டது.ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.ஆத்திரமடைந்த 4பேரும் சேர்ந்து பாலுவை பீர் பாட்டிலால் குத்தி, தாக்கி, கீழே தள்ளினார்கள். இதில் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது அவர் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனை சேர்க்கப்பட்டார் இது குறித்து ரத்தினபுரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்துகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த செந்தில் (வயது 25) கோவை ரத்தினபுரியை சேர்ந்த ஜெயக்குமார் (வயது 20) ரத்தினபுரி ஆறுமுக கவுண்டர் வீதியை சேர்ந்த தினேஷ் ( வயது 29) ஆகியோரை கைது செய்தனர்.வினோத் என்பவரை தேடி வருகிறார்கள்.இது தொடர்பாக ரத்தினபுரி விஸ்வநாதபுரத்தை சேர்ந்த வினோத்குமார் கொடுத்த புகாரின் பேரில் பார் கேஷியர் ஆவுடையார் கோவில் பொன்னமங்கலத்தைச் சேர்ந்த பிரகாஷ் ( வயது 29) தேவகோட்டை மாவட்டம் நாராயண மங்கலத்தைச் சேர்ந்த பார்கேஷியர் செந்தில்குமார் (வயது 37)ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.பாலு என்பவரை தேடி வருகிறார்கள்.