கோவை வனத்தில் சந்தன மரம் வெட்டி கடத்த முயன்ற 3 பேர் கைது..!

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே காரமடை வனச்சரகத்தில்
சந்தன மரத்தினை வெட்டி கடத்த முயற்சி செய்த 3 பேரை கைது செய்து சிறையில்
அடைத்தனர்.

மேட்டுப்பாளையம் அருகே காரமடை வனச்சரகத்திற்கு உட்பட்ட
குண்டூர் அன்சூர் மோரிப்பாளையம் பகுதியில் சந்தன மரம் வெட்டி
கடத்தப்படுவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த பகுதியில்
காரமடை வனச்சரக அலுவலர் திவ்யா தலைமையில் ரோந்து பணியில் ஈடுப்பட்டு
இருந்தனர். அப்போது அந்த பகுதியில் குண்டூர் பகுதியை சேர்ந்த காளி மகன்
முருகேசன்(35),ரங்கசாமி மகன் வீரையன்(எ) காளிமுத்து,சுப்பிரமணி மகன்
ஆனந்தகுமார் (42) சொரண்டி பகுதியை சேர்ந்த ராஜன் மகன் சஞ்சித்(21) ஆகிய 4
பேரும் 15 சந்தன மரங்களை வெட்டி செதுக்கி கடத்த முயற்சி செய்தது
தெரியவந்தது. இதையடுத்து வீரையன்(எ) காளிமுத்து, சஞ்சித், ஆனந்தகுமார்
ஆகிய 3 பேரை கைது செய்து சந்தன மரத்தையும் பறிமுதல் செய்யப்பட்டு
குற்றவியல் நடுவர் முன்பு ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.மேலும்
தப்பியோடிய முருகேசன் என்பவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.