கோவை அருகே உள்ள கே. கே .புதூர் சுந்தரம் விதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 42 ) தற்போது இவர் கணபதி, திருவேங்கடம் முதல் வீதியில் வசித்து மீன் வியாபாரம் செய்து வந்தார்.தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்து அவரை வீட்டு படுக்க அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது ...

கோவை சிங்காநல்லூர் மசக்காளிபாளையம் ரோட்டில் உள்ள லட்சுமி நகரை சேர்ந்தவர் சுரேஷ் குமார் ( வயது 41)இவர் ராமநாதபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கேசியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவில் அலுவலகத்தை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலையில் வந்து பார்த்தபோது அலுவலக பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. ...

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஓட்டுபட்டறை அருகே உள்ள அம்பிகாபுரம் கிராமத்தில் கடந்த ஒரு வார காலமாக இரவு நேரத்தில் கிராமத்துக்குள் நுழைந்து குடியிருப்புகளை நோட்டமிடும் சிறுத்தையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது. இந்த நிலையில் அந்தப் பகுதியில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் ...

கோவை: தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடை பெறாமல் இருந்த திருவிழா உள்ளிட்ட கொண்டாட்டங்கள் தற்போது எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்து ...

கோவை பீளமேட்டில் தற்போது உள்ள பன்னாட்டு விமான நிலையம் 627 ஏக்கரில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக ராணுவத்துக்கு சொந்தமான 135 ஏக்கரும், புறம் போக்கு நிலம் 30 ஏக்கரும், தனியாருக்கு சொந்தமான 462 ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்பட உள்ளன. இதில் ராணுவத்துக்கு சொந்தமான நிலம் மற்றும் புறம்போக்கு நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டு விட்டன. தனியாருக்கு ...

கோவை வெரைட்டி ஹால் ரோடு அருகே உள்ள எம்.என்.ஜி. வீதியை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 21-ந் தேதி 35 வயது வாலிபர் ஒருவருடன் திருமணம் நடந்தது. நேற்று புதுப்பெண் மற்றும் அவரது உறவினர்கள் ஆகியோர் ஒப்பணக்கார வீதியில் உள்ள துணிக்கடைக்கு சென்றனர். அங்கு இருந்த புதுப்பெண் கழிவறைக்கு செல்வதாக கூறி விட்டு ...

கோவை மாநகராட்சியில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமான நிதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குளக்கரைகளில் பூங்கா அமைத்தல், நகரில் மாதிரி சாலைகள், பூங்கா உருவாக்கம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் வாலாங்குளம் மற்றும் உக்கடம் பெரிய குளத்தில் படகு சவாரி அமைக்கப்பட்டுள்ளது. உக்கடம் புறவழிச் சாலையில் உள்ள வாலாங்குளத்தில் மிதவை பாலம், ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் பகுதியை சேர்ந்தவர் சிவராமன் (வயது 36). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சிவராமனின் 2 -வது மகன் வினோத்குமார் என்பவர் உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். அதற்காக வினோத்குமார் மைசூரில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2 வாரங்களுக்கு ...

கோவை வேலாண்டிப்பாளையம் கோவில்மேடை சேர்ந்தவர் கணேஷ்பாபு (வயது 24). டிரைவர். இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (22). தொழிலாளி. இந்த நிலையில் கணேஷ்பாபுவின் தம்பி கமலேஸ்வரன் (19) என்பவர் அண்ணனின் நண்பர் கார்த்திக்கை மரியாதை இல்லாமல் பேசி வந்தார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று கமலேஸ்வரன், கார்த்திக்கு போன் ...

கோவை: பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை சுப்பேகண்டன் புதூரை சேர்ந்தவர் பிரசாந்த் கணேஷ் (வயது 44). லாரி டிரைவர். சம்பவத்தன்று அவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி தூங்க சென்றார். மறுநாள் காலை எழுந்து வந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிள் திருட்டு போயிருந்தது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தில் தேடி ...