வழக்கறிஞரை காரில் கடத்தி வலுக்கட்டாயமாக மது குடிக்க வைத்து நிர்வாண புகைப்படம் எடுத்து பணம் பறிப்பு-கோவையில் பரபரப்பு..!

கோவை சேர்ந்த 61 வயது வழக்கறிஞர் ஒருவர் கோவை மாநகர ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில்

வழக்கறிஞரான தான் பெரிய வணிக நிறுவனங்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கி வருவதாகவும், அவரை ஒரு பெண் தொலைபேசியில் தொடர்பு கொண்டு. அவர் நிறுவனத்திற்கு சட்ட ஆலோசனைகளை வழங்கும்படி கேட்டு  உள்ளார். இதனால் அந்த பெண்ணை அவர் வீட்டில் உள்ள அலுவலகத்திற்கு வருமாறு கூறியுள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணின் மகன் என்று கூறி ஒரு நபர் அவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாலசுந்தரம் சாலையில் நிற்பதாக கூறியதால். அங்கு சென்று அவரை சந்தித்து அவர் வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார் வழக்கறிஞர்.
ஆனால் அவர் அம்மா மாற்றுத் திறனாளி என்பதால் காரில் உள்ளார் எனவே காரில் அமர்ந்து கொண்டு பேசலாம் என்று கூறியுள்ளார். இதை நம்பி வழக்கறிஞர் தானே வருகின்றேன் என்று கூறினார். அப்பொழுது அவர்கள் நின்ற இடத்தில் அருகே ஒரு கார் வந்தது. அதிலிருந்து இறங்கிய நபர் அவரை திடீரென காருக்குள் இழுத்து போட்டு கைகளை கட்டி, வாயை பொத்தி கடத்திச் சென்ற உள்ளனர். மேலும் அவரிடம் இருந்த ரூபாய் 27 ஆயிரத்து 500 ரூபாய் பறித்துக் கொண்டு ஆன்லைன் பணப் பரிமாற்றம் மூலம் அவர் வங்கிக் கணக்கில் இருந்து ரூபாய் 35 ஆயிரத்தை பறித்து கொண்டனர். பின்னர் அவர்கள் ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்று அவரை வலுக்கட்டாயமாக மது குடிக்க வைத்தனர். இதனால் மது போதையில் மயங்கி கிடந்ததாகவும் கண்விழித்து பார்த்தபோது அவர்கள் அவர் ஆடைகளை அகற்றி நிர்வாணமாக புகைப்படம் எடுத்தது தெரியவந்துள்ளது. அந்த புகைப்படங்களை காண்பித்து பணம் கேட்டு மிரட்டுவதாகவும் பணம் தர வில்லை என்றால் சமூக வலைதளங்களில் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு விடுவதாக மிரட்டுவதாகவும் எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த வழக்கறிஞர் புகார் மனுவில் கூறி உள்ளார்.