கோவை: தமிழகத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தும் சில பகுதிகளில் புகையிலைப் பயன்பாடு இருந்து வருகிறது. இந்நிலையில், மாவட்ட புகையிலைத் தடுப்புப் பிரிவின்கீழ் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பறிமுதல், அபராதம் விதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் ...
கோவையில் ஒற்றைக் காட்டு யானை: இரும்பு கதவை உடைத்து விட்டு, வெளியே செல்லும் சி.சி.டி.வி காட்சிகள். கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள தாளியூர் சுற்று வட்டார கிராமங்களில் கடந்த 2 மாதங்களுக்கு முன் விவசாய நிலங்களுக்குள் சுமார் 10 யானைகள் கொண்ட யானை கூட்டம் உள்ளே சென்று அட்டகாசம் செய்து வந்தன. பெரும் போராட்டத்திற்கு பின், ...
கோவையில் இருந்து மத்தியபிரதேச மாநிலம், ஜபல்பூருக்கு இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில் சேவை 2023-ம் ஆண்டு ஜனவரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவை – ஜபல்பூா் இடையே கடந்த சில மாதங்களாக சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அக்டோபர் முதல் வாரம் வரை இயக்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ரயில் சேவை ஜனவரி மாதம் வரை ...
கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை ரெயில் நிலையம் எதிரில் தமிழ்நாடு போலீஸ் துறை ஹமில்டன் கிளப் அமைந்துள்ள போலீஸ் அருங்காட்சியகத்தில் புனரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதன் காரணமாக தற்காலிகமாக பொதுமக்கள் பார்வையிட அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது பணிகள் நிறைவடைந்துள்ளதால், (திங்கட்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களும்) ...
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் கரண்டிகள், முலாம் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் வாழை இலை வடிவத்தாள்கள், பிளாஸ்டிக் தோரணங்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்ற ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவின்படி தடை ...
ஊட்டியைச் சோ்ந்தவா் சேகா்(50). இவா் தனியாா் நா்சரி உரிமையாளராக உள்ளாா். இவரது வீட்டின் அருகே 14 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சேகா் அந்த மாணவியை தனது காரில் பள்ளிக்கு அழைத்து சென்று விடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அப்போது மாணவியை அவர் ...
கோவை: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் அரங்கேறியது. அப்போது பல்வேறு ஆவணங்களும் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளை சம்பவத்தின்போது, அதனை தடுக்க முயன்ற காவலாளி ஒம்பகதூர் என்பவரும் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் ...
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி உத்தவ் தாக்கரே, அந்தக் கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் தலைமையில் இரண்டாக உடைந்திருக்கிறது. இருவரும் தங்களது அணிதான் உண்மையான சிவசேனா என்று கூறி வருகின்றனர். ஏக்நாத் ஷிண்டே தங்களுக்கு சிவசேனாவின் வில் அம்பு சின்னத்தை ஒதுக்கவேண்டும் என்று கோரி தேர்தல் கமிஷனில் மனுக்கொடுத்திருக்கிறார். இதையடுத்து இரு அணிகளும் தங்கள் ...
சென்னை: திமுக தலைவர் தேர்தலில் போட்டியிட முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். தி.மு.க. தலைவா், பொதுச்செயலாளா், பொருளாளா் பதவிகளுக்கு போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது. தி.மு.க. தலைவா், பொதுச் செயலாளா், பொருளாளா் ஆகியோரை தோந்தெடுக்க வரும் 9-ஆம் தேதி பொதுக் குழு கூடுகிறது. ...
புரட்டாசி மாதம் என்றாலே அது பெருமாள் மாதம் என்பது பக்தர்களின் கருத்து. அதுவும் திருமலை திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். திருமலையில் புரட்டாசி நவராத்திரியை ஒட்டி பிரம்மோற்சவமும் நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்வார்கள். இதை ஒட்டிக் கடந்த வாரம் திருமலையில் ஒரு நாளைக்கு 80 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ...













