கோவை போத்தனூர் சிட்கோ பகுதியைச் சேர்ந்தவர் ரவிசங்கர் (வயது 39) இவர் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார்.இவரிடம் ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்திலிருந்து தொடர்பு கொள்வதாகவும், டூரிஸ்ட் மையங்கள் தொடர்பான தகவல்களை பரிமாறினால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று ஒருவர் ஆசை வார்த்தை காட்டினார் .இதை நம்பி அவர் ஆக்சிஸ் வங்கி மூலம் ...

கோவை: பொள்ளாச்சி உட்கோட்டம், மகாலிங்கபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கேரளா லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் சப் இன்ஸ்பெக்டர் இளையராஜா சம்பவ இடமான தண்டு மாரியம்மன் கோவில் டி.கோட்டம்பட்டி பகுதிக்கு விரைந்து சென்று சோதனை செய்தார். அப்போது லாட்டரி சீட்டுகளை வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வினோத்குமார் (40) என்பவரை ...

கோவை சூலூர் அருகே உள்ள அப்பநாயக்கன் பட்டி மகாலட்சுமி கார்டனை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 58). தி.மு.க.வை சேர்ந்த இவர் அப்பநாயக்கன்பட்டி ஊராட்சி 9-வது வார்டில் கவுன்சிலராக உள்ளார். நேற்று காலை 11 மணியளவில் ராஜேந்திரன் தனது வீட்டை பூட்டி விட்டு உறவினரான செந்தில்குமார் இறந்து ஒரு வருடம் ஆனதையொட்டி திதி காரியத்துக்காக கதிர்நாயக்கன் பாளையத்துக்கு ...

சூலூர்: உத்தரப்பிரதேசம் கோரக்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரின்ஸ் உபாத்தாயா (வயது 20). இவர் செஞ்சேரி பிரிவு அருகே தங்கி இருந்து பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்தார். சம்பவத்தன்று பெயிண்டிங் வேலை முடித்து பிரின்ஸ் உபாத்தாயாவும், அவரது நண்பரும் செஞ்சேரி பிரிவில் உள்ள பி.ஏ.பி வாய்க்காலில் குளிக்க சென்றனர். அப்போது பிரின்ஸ் உபாத்தாயா திடீரென தவறி வாய்க்காலில் ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பொறுப்பேற்றதில் இருந்து கோவைக்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வருகிறார். பொதுமக்கள், போலீஸ் நல்லுறவை மேம்படுத்த போலீசார் வீதிதோரும் நடந்து சென்று மக்களிடம் குறைகளை கேட்ட உத்தரவிட்டார். போலீசாரின் மன அழுத்தத்தை போக்க ஞாயிற்றுக்கிழமைகளில் அவர்களின் குடும்பத்தினருடன் கலந்து கொள்ளும் விளையாட்டு போட்டிகளை நடத்தினார். போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் ...

கோவையில் நடைபெற்ற கார் வெடி விபத்துக்கு தேவையான வெடி பொருட்களை குற்றவாளிகள் ஆன்லைன் மூலம் வாங்கிய தகவல் வெளியானதை தொடர்ந்து அது போன்ற பொருட்களை விற்பனை செய்பவர்களை தமிழக போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கோவையில் மதுக்கரை, க.க.சாவடி, செட்டிபாளையம், கிணத்துக்கடவு, போலீஸ் நிலையதிற்கு உட்பட மதுக்கரை, எட்டிமடை, க.க.சாவடி, நாச்சிபாளையம், மலுமிச்சம்பட்டி, ...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த பூ மார்க்கெட்டிற்கு சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து முல்லை, மல்லிகை பூவும், ஓசூர், பெங்களூரு பகுதிகளில் இருந்து ரோஜா, காக்கடை பூக்களும் வருகிறது. இதுதவிர சேலத்தில் இருந்து அரளி பூவும், நிலக்கோட்டையில் இருந்து குண்டுமல்லியும் விற்பனைக்கு வருகிறது. இந்த பூ மார்க்கெட்டில் கோவை மாநகர் ...

கோவை: மேட்டுப்பாளையம்-கோவை இடையே வாரத்தின் ஆறு நாட்கள் மட்டுமே பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. ஞாயிற்றுக்கிழமை அந்த ரெயில் இயக்கப்படாததால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர். இதனையடுத்து மத்திய இணை மந்திரி எல் முருகன், ரெயில்வே துறை அமைச்சகத்திற்கு எழுதியிருந்த கடிதத்தில், மேட்டுப்பாளையம்-கோவை ரெயிலை ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்க வேண்டும் என்று ஏராளமான பயணிகள் மற்றும் சுற்றுலாப் ...

கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.இதற்கு ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் செல்வம் தலைமை தாங்கினார்.பின்னர் அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அப்போது அவர்கள், தனியார் நிதி நிறுவனங்கள் அபராதம் என்ற பெயரில் ஆட்டோ டிரைவர்களை கொள்ளை ...

கோவை: நாடு முழுவதும் ஆண்டுதோறும் டிசம்பர் 1-ந் தேதி உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்படுகின்றன.ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருத்தை மையமாகக் கொண்டு இந்த தினம் அனுசரிக்கப்படும். இந்த ஆண்டு சமப்படுத்துதல் என்ற மையக்கருத்தை கொண்டு பேரணிகள் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ...