கோவை: சிவகங்கையை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 26). இவர் கோவை மதுக்கரை பகுதியில் தங்கி அங்குள்ள பேக்கரியில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று அந்த பேக்கரிக்கு வாலிபர் ஒருவர் வந்தார். அவர் அங்கு டீ குடித்து கொண்டு இருந்தார். அப்போது தினேஷ்குமார் தனது செல்போனை மேஜையின் மீது வைத்து வேலை செய்து கொண்டு இருந்தார். ...
கோவை மாவட்டம் அன்னூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி. இவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு கோட்டை பாளையம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த அருண்குமார் (22) என்பவருடன் திருமணம் நடந்தது. இந்நிலையில் சிறுமி கர்ப்பமானார்.சம்பவத்தன்று பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து சிறுமி மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. டாக்டர்கள் ...
கோவை : வேளாண் பட்டப்படிப்பு படித்த இளைஞர்களை தொழில்முனை வோராக்கும் திட்டம், கோவை மாவட்டத்தில் உள்ள 56 கிராம ஊராட்சிகளிலும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) ஷபி அகமது வெளியிட்டடுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மாவட்டத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் வேளாண்மை, தோட்டக்கலை, ...
கோவை : காவல்துறையில் பணியாற்றும் காவலர் முதல் அதிகாரிகள் வரை நேரம் பார்க்காமல் ஓய்வின்றி வேலை பார்ப்பதால் சிலர் மன அழுத்தத்திற்கு ஆளாகிறர்கள்.இதனால் சில காவலர்கள் எதற்கெடுத்தாலும் கோபப்படுவார்கள்.மேலும் சிலர் அவர்கள் வீட்டில் நடந்துள்ள துயர சம்பவங்களை மனதில் நினைத்து மன அழுத்தத்திற்கு ஆளாகிறர்கள் .இதை தடுக்க கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் ...
கோவை: தமிழகத்தில் குழந்தைத் திருமணங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் சமூக நலத் துறை சாா்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக உயா்கல்வி படிக்கும் பெண்களுக்கு உதவித் தொகை உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும், தொடா்ந்து குழந்தைத் திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. குழந்தைத் திருமணங்களைத் தடுத்து நிறுத்தும் வகையில் சமூக நலத்துறையினா் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் ...
மேட்டுப்பாளையம்: கர்நாடக மாநிலம் ஒயிலாண்ட நல்லி பகுதியை சேர்ந்தவர் ரஹ்மத்துல்லா. இவரது மகன் அன்வர் பாஷா. இவர் சொந்தமாக மினி வேன் வைத்துள்ளார். சம்பவத்தன்று இவரது மினிவேனில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 16 பேர் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். நீலகிரியில் பல்வேறு இடங்களைசுற்றி பார்த்த அவர்கள், நேற்று தங்களது ஊருக்கு புறப்பட்டனர். வாகனத்தை ...
ஊட்டி: நீலகிரியில் 2-வது சீசன் தொடங்கியது முதல் இங்கு இதமான காலநிலை நிலவுகிறது. இதை அனுபவிக்க தமிழகம் மட்டுமல்லாது கா்நாடகம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் நீலகிரியில் குவிந்தனா். இவா்கள், ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலைசிகரம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை கண்டு ரசித்தனர். ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் வெள்ளியங்காடு மற்றும் பெல்லாதி குளங்களில் மீன் பிடித்து தொழில் செய்து வருகின்றனர். இதனிடையே ஒரு தரப்பினர் பெல்லாதி குளத்தில் மற்றொரு தரப்பினரை மீன்பிடிக்க விடாமல் தடுப்பதாக கூறி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது பத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு வலையை ...
கோவை : கோவை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சமீரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியலமைப்பினர், விவசாயிகள், பொதுமக்கள் என தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். இதில் நாம் தமிழர் கட்சி சார்பாக அளிக்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- கோவை மாநகராட்சியின் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பயிற்சி வகுப்பு நடத்தியுள்ளது. அரசு ...
ஊட்டி: சென்னையை சோ்ந்த குமரேசன் என்பவருக்கு உதகையில் மஞ்சனக்கொரை குந்தா ஹவுஸ் பகுதியில் சொந்த இடம் உள்ளது. இவா், அந்த இடத்தில் வீடு கட்டுவதற்கான பணிகளை தனியாா் ஒப்பந்ததாரா் அா்ஷத்திடம் அளித்திருந்தாா். இவரது அறிவுறுத்தலின்படி வீடுகட்டும் பணியில் 10 தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா். கடந்த ஒரு மாதமாக பணிகள் நடைபெற்று வருகிறது. வீட்டின் அருகே தடுப்புச் சுவா் ...