பணம் வைத்து சூதாடிய வியாபாரி உட்பட 4 பேர் கைது..!

கோவை கிணத்துக்கடவு பக்கம் உள்ள கோத வாடியில்உள்ள ஒரு மைதானத்தில் பணம் வைத்து சீட்டாட்டம் நடப்பதாக கிணத்துக்கடவு போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் அங்கு திடீர் சோதனைநடத்தினார். அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக வடுகபாளையம், வஞ்சிமுத்து (வயது 37) பவித்ரன் (வயது 28) ஆலந்துறை விஜயகுமார் ( வயது 37) குளத்துப்பாளையம் புதூர் மகாலிங்கம் (வயது43) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து ரூ. 68 ஆயிரம் பணமும், சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. கோழிக்கடை நடத்தி  வருகிறார் .மற்றவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.