கோவையில் சட்டவிரோதமாக மது விற்ற 4 பேர் கைது..!

கோவை மாநகரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, காந்திபுரம், ஒண்டிபுதூர் உள்ள இடங்களில் சோதனை செய்தனர். அப்பொழுது அங்கு சட்ட விரோதமாக மது விற்பனை செய்த புதுக்கோட்டையை சேர்ந்த மாயழகு, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபு, கதிர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபு ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 37 மதுபானங்களை பறிமுதல் செய்தனர்.