மங்களூரு: மிளகு மற்றும் முட்டையுடன் சேர்த்து ரம் சாப்பிட்டால் கொரோனா தொற்று பறந்துவிடும் என்று வீடியோ பதிவிட்ட காங்கிரஸ் கவுன்சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் மங்களூரு அருகே நடந்துள்ளது. தென்கனரா மாவட்டம், உல்லால் நகராட்சியில் கவுன்சிலராக இருப்பவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரவீந்திர ஹட்டி. இவர் அவ்வப்போது கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார். அவரை ...

கோவை அன்னூரில் சிப்காட் தொழில் பூங்கா – நிலம் கையகப்படுத்தும் தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ‘அன்னூர் விவசாய நிலத்தை எடுக்க முயன்றால் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடங்குவேன். திமுக அரசுக்கு எப்பவுமே முன்னாடி ...

கோவையில் ”லொல்.. லொல்..” தொல்லைக்கு கோவை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் புனரமைக்கப்பட்ட நாய்கள் கருத்தடை மையத்தை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தக்குமார் குத்துவிளக்கு ஏற்றி வைத்து திறந்து வைத்தார். கோவை மாநகருக்கு உட்பட்ட பகுதிகளில் தெரு நாய்கள் அதிகரித்து காணப்படுகின்றன. இந்த தெருநாய்கள் வீதிகளில் விளையாடும் குழந்தைகளை அவ்வப்போது ...

டெல்லி : மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட டெல்லி மாநகராட்சி தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி முதன்முறையாக வெற்றி வாகை சூடி இருக்கும் நிலையில் பாஜகவும் ஓரளவு இடங்களை பெற்றிருக்கிறது. ஆனால் தலைநகரில் தேசிய கட்சியான காங்கிரஸின் நிலைமை பாதாளத்திலிருந்து படுபாதாளத்திற்கு சரிந்துள்ளது. டெல்லி மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவானது நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. ...

இருசக்கர வாகனம் திருடி செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் : வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த சிவ பிரசாத் இவர் சிவானந்தா காலனி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டிற்கு முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தூங்க சென்றுள்ளார். பின்னர் ...

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு: மேலும் 3 பேர் கைது கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக மேலும் 3 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், கடந்த அக்டோபர் 23 ம் தேதி நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் பலியானார். அவரது வீட்டில் நடந்த ...

கோவையில் அஞ்சல் துறை சாா்பில் நடத்தப்படும் ஆதாா் எண்ணுடன் செல்போன் எண் இணைக்கும் சிறப்பு முகாம் டிசம்பா் 15-ந் தேதி வரை மட்டுமே நடைபெறும் என்று முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் கோபாலன் தெரிவித்துள்ளாா். இது குறித்த அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசின் கிஷான் சம்மன் நிதி திட்டத்தில் தொடா்ந்து நிதியுதவி பெறுவதற்கு ...

கோவை மாநகர பகுதிகளில் உள்ள சாலைகளில் மாடு, குதிரை போன்ற கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. கால்நடைகளை காலையில் மேய்ச்சலுக்கு அவிழ்த்து விடும் உரிமையாளர்கள் மாலையில் தான் வீடுகளுக்கு பிடித்து செல்கின்றனர். பகல் முழுவதும் சாலைகளில் சுற்றும் கால் நடைகளால் விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகிறது. சாலைகளில் சுற்றும் கால்நடைகளை மாநகராட்சி அதிகாரிகள் பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு ...

கோவை சரவணம்பட்டி திரு.வி.க வீதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 29). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகீறார். சம்பவத்தன்று காலை வீட்டில் இருந்த அவர் குளிப்பதற்காக குளியல் அறைக்கு சென்றார். அப்போது வீட்டின் கதவை திறந்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அவரது அறையில் இருந்த லேப்டாப், செல்போன், ...

கோவை: கேன்சர் நோயாளிகளின் சிகிச்சைக்கு உதவ, நிதி திரட்டும் வகையில் கோவையில் மராத்தான் போட்டி, வரும் 11-ந் தேதி நடக்கிறது.இப்போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. போட்டியில் பங்கேற்க, 16 ஆயிரத்து 500 போட்டியாளர்கள் பதிவு செய்துள்ளனர். ஆண்கள், பெண்கள், முதியவர் மற்றும் சிறுவர்களுக்கு, 5கி.மீ., 10கி.மீ., மற்றும் 21கி.மீ., ஆகிய 3 பிரிவுகளில், போட்டி நடத்தப்படுகிறது. ...