கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பொறுப்பேற்றதில் இருந்து கோவைக்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வருகிறார். பொதுமக்கள், போலீஸ் நல்லுறவை மேம்படுத்த போலீசார் வீதிதோரும் நடந்து சென்று மக்களிடம் குறைகளை கேட்ட உத்தரவிட்டார். போலீசாரின் மன அழுத்தத்தை போக்க ஞாயிற்றுக்கிழமைகளில் அவர்களின் குடும்பத்தினருடன் கலந்து கொள்ளும் விளையாட்டு போட்டிகளை நடத்தினார். போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் ...

கோவையில் நடைபெற்ற கார் வெடி விபத்துக்கு தேவையான வெடி பொருட்களை குற்றவாளிகள் ஆன்லைன் மூலம் வாங்கிய தகவல் வெளியானதை தொடர்ந்து அது போன்ற பொருட்களை விற்பனை செய்பவர்களை தமிழக போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கோவையில் மதுக்கரை, க.க.சாவடி, செட்டிபாளையம், கிணத்துக்கடவு, போலீஸ் நிலையதிற்கு உட்பட மதுக்கரை, எட்டிமடை, க.க.சாவடி, நாச்சிபாளையம், மலுமிச்சம்பட்டி, ...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த பூ மார்க்கெட்டிற்கு சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து முல்லை, மல்லிகை பூவும், ஓசூர், பெங்களூரு பகுதிகளில் இருந்து ரோஜா, காக்கடை பூக்களும் வருகிறது. இதுதவிர சேலத்தில் இருந்து அரளி பூவும், நிலக்கோட்டையில் இருந்து குண்டுமல்லியும் விற்பனைக்கு வருகிறது. இந்த பூ மார்க்கெட்டில் கோவை மாநகர் ...

கோவை: மேட்டுப்பாளையம்-கோவை இடையே வாரத்தின் ஆறு நாட்கள் மட்டுமே பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. ஞாயிற்றுக்கிழமை அந்த ரெயில் இயக்கப்படாததால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர். இதனையடுத்து மத்திய இணை மந்திரி எல் முருகன், ரெயில்வே துறை அமைச்சகத்திற்கு எழுதியிருந்த கடிதத்தில், மேட்டுப்பாளையம்-கோவை ரெயிலை ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்க வேண்டும் என்று ஏராளமான பயணிகள் மற்றும் சுற்றுலாப் ...

கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.இதற்கு ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் செல்வம் தலைமை தாங்கினார்.பின்னர் அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அப்போது அவர்கள், தனியார் நிதி நிறுவனங்கள் அபராதம் என்ற பெயரில் ஆட்டோ டிரைவர்களை கொள்ளை ...

கோவை: நாடு முழுவதும் ஆண்டுதோறும் டிசம்பர் 1-ந் தேதி உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்படுகின்றன.ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருத்தை மையமாகக் கொண்டு இந்த தினம் அனுசரிக்கப்படும். இந்த ஆண்டு சமப்படுத்துதல் என்ற மையக்கருத்தை கொண்டு பேரணிகள் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ...

கோவை மாவட்டம் சூலூர் சிந்தாமணிபுதூர் பகுதியில் கோவை கொச்சின் பைபாஸ் சாலை உள்ளது. தினம்தோறும் இந்த சாலையில் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் சேலத்தில் இருந்து கேரளா நோக்கி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி ஒன்று எதிரே வந்த பெட்ரோல் கிடங்குக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக சென்று கொண்டிருந்த டேங்கர் லாரியில் மோதியது. அப்போது ...

கோவை மாவட்டம் தேவராயபுரம் ஊராட்சியில் சென்றாம்பாளையம், வேலாயுதம்பாளையம், வடக்கு நல்லிக்கவுண்டன்பாளையம், தேவராயபுரம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் சுமார் 110 தொகுப்பு வீடு கட்டப்பட்டன. இந்த வீடுகள் ஏழை மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த வீடுகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குழந்தைகளும் வாழ்ந்து வருகின்றனர். இந்த ...

கோவை: சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:- கோவை மார்க்கம் வாஞ்சிபாளையம், சோமனூர் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் நேற்று முதல் வருகிற 31-ஆம் தேதி வரை சேலம்-கோவை பாசஞ்சர் ரயில்(06803), கோவை-சேலம் பாசஞ்சர் (06802) ஆகிய அனைத்து ரயில்களும் முழுவதுமாக ரத்து ...

கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரம் . ஜனதா நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகன் ராகேஷ் (வயது15) அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.உடல் நல குறைவு காரணமாக 2 -வது கட்ட இடைதேர்வு இவர் எழுதவில்லை.இதனால் மன அழுத்தத்துடன் காணப்பட்டார் .இந்த நிலையில் நேற்று அதிகாலையில் ராகேஷ் வீட்டில் இருந்த சைக்கிள் மற்றும் ...