கோவைமாவட்டம் கணியூர் அருகே வேட்டைக்காரன் குட்டை பகுதியில் சங்கமம் ஒயிலாட்ட கலைக்குழு சார்பில் ஒயிலாட்டம் அரங்கேற்ற விழா நேற்று இரவு நடைபெற்றது. இந்திய சுதந்திரத்திற்கு வித்திட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், 75வது சுதந்திர ஆண்டு அமுதா பெரு விழாவை முன்னிட்டும் இந்த அரங்கேற்றம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், சூலூர் சட்டமன்ற உறுப்பினர் ...

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை உள்ளிட்ட 29 மாவட்டங்களில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ததன் மூலம் கடந்த 10 மாதங்களில் ரூ.5.49 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. பீர் உள்ளிட்ட மது பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ. 20 வரை கூடுதலாக ...

மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக நாகர்கோவிலை சேர்ந்த ஒருவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் ஆட்டோ ஓட்டுனரும், பயணித்தவரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆட்டோவில் கிடைத்த வயர், பேட்டரி போன்ற பொருட்களை இருந்ததை தொடர்ந்து ...

சென்னை: இன்னும் 24 மணி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் முழுமையாக சரி செய்யப்படும் என அரசு கேபிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘நேற்று முதல் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு மென்பொருள் சேவைகள் வழங்கி வந்த தனியார் நிறுவனத்தின் மென்பொருள் சேவைகளில் திடீரென தடைபட்டதால் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவைகள் பல பகுதிகளில் உள்ள ...

கத்தாரில் நடந்து வரும் 2022, உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியின் மூலம் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிபாவுக்கு கிடைத்த வருமானத்தை அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. கத்தாரில் நடக்கும் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் மூலம் பிபா அமைப்புக்கு 750 கோடி டாலர் வருமானம் கிடைக்கும். அதாவது இந்திய மதிப்பில் ஏறக்குறைய ரூ.61,339 கோடி கிடைக்கும். பிபா ...

மதுரை நீதிமன்றத்தில் கையெழுத்துப்போட வந்த சவுக்கு சங்கரிடம், செய்தியாளர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். அப்போது, நிபந்தனை முடிந்தவுடன் பேசுகிறேன் என்று கூறிவிட்டு சென்றார் சவுக்கு சங்கர். நீதித்துறையில் ஊழல் படிந்து இருப்பதாக சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்த யூடியூபர் சவுக்கு சங்கர் மீது தாமாக முன்வந்து உயர்நீதிமன்ற மதுரை கிளை, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. ...

நாமக்கல்: உலகக்கோப்பை கால்பந்து போட்டி எதிரொலியாக நாமக்கல்லில் இருந்து 1.5 கோடி முட்டைகள் கத்தாருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. உலக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருவதால் முட்டையின் தேவை கத்தாரில் அதிகரித்துள்ளது.   ...

22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் நேற்று தொடங்கியது. கத்தாரில் உள்ள அல் பைட் ஸ்டேடியத்தில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கிய ஃபிஃபா உலக கோப்பையின் முதல் போட்டியில் கத்தாரை 2-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி ஈகுவடார் அணி வெற்றி பெற்றது. ஃபிஃபா உலக கோப்பை தொடர் வெற்றிகரமாக தொடங்கி நடந்தாலும், ஒரு ...

வாஷிங்டன்: சமீபத்தில் நடந்த முடிந்த ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி- பைடன் இடையே நடந்த சந்திப்பு முக்கியமானதாக மாறியுள்ள நிலையில், இது தொடர்பாக அமெரிக்க டாப் அதிகாரிகள் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்தனர். ஜி20 மாநாடு சமீபத்தில் தான் இந்தோனேசியாவில் நடந்து முடிந்தது. இதில் உலகின் டாப் 20 பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து ...

அதிமுக பொதுக்குழு குறித்த வழக்கில் ஓபிஎஸ் தரப்பு வாதத்தை ஏற்று வழக்கு வரும் நவம்பர் 30ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. கடந்த ஜூலை மாதம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்து இருந்தது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோர் ...