அனுமதிக்கபட்ட வழித் தடம் வரை இயக்காத தனியார் பேருந்து: ரூ .20,000/- அபராதம் முதல்வர் நிவாரண நிதியில் செலுத்த வேண்டும் – உரிமையாளருக்கு கோவை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு !!! கோவையில் அனுமதிக்கபட்ட வழித் தடம் வரை இயக்காத தனியார் பேருந்து உரிமையாளருக்கு ரூ.20,000 அபராதம் விதித்தும் அத்தொகையை முதல்வர் நிவாரண நிதிக்கு அளிக்கும்படி நுகர்வோர் ...
கோயம்புத்தூர் மாவட்டம் உருவான தினம்; இன்று வயது 218. பவானியை தலைமையிடமாக வடகொங்கு, தாராபுரத்தை தலைமையிடமாக தென்கொங்கு என இரண்டு மாவட்டங்களாக இருந்த கோவை ஒன்றுபட்ட கோவை மாவட்டமாக பிறந்து இன்றுடன் 217 ஆண்டுகள் நிறைவடைகின்றன. கி.பி 1804 நவம்பர் 24-ல் கோவை மாவட்டம் உதயமானது. அதையொட்டி நவம்பர் 24 – ம் தேதியை கோயமுத்தூர் ...
அமெரிக்காவில் பனிப்பொழிவு வழக்கத்தை விட அதிகரித்துள்ள நிலையில் சில மாகாணங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல இடங்களில் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. பனிக்காலத்தின் தொடக்கத்திலேயே அதிகமான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக நியூயார்க் நகரம் பனிப்பொழிவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எரி நகரில் 24 மணி நேரத்திற்குள் 180 செ.மீ ...
மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கி உள்ள பயங்கரவாதி ஷாரிக் குக்கர் வெடிகுண்டை அவரே தயாரித்துள்ளார். எம்.பி.ஏ பட்டதாரியான அவர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தந்தையுடன் ஜவுளி வியாபாரத்தை கவனித்து வந்துள்ளார். சிவமொக்காவில் சுதந்திர தின பவள விழாவின்போது வீர சாவர்க்கர் படத்துடன் பேனர் வைத்த விவகாரத்தில் கலவரமும் ஏற்பட்டது.இதில் மாஸ் முனீர், சையது யாசினை ...
கோவையில் கார் வெடிப்பு, மங்களூருவில் குக்கர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்ந்து கோவையில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். கோவையில் தேசிய புலனாய்வு முகமை ( என் ஐ ஏ )அதிகாரிகள் முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கோவை குரும்பபாளையம் வில்லேஜ் நகர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் ( வயது 35 )என்பவர் ஆன்லைனில் பொட்டாசியம் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சந்தே கவுண்டன்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது 52) கூலி தொழிலாளி .குடிப்பழக்கம் உடையவர் .இவர் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதேபோல கோவை பெரியநாயக்கன்பாளையம் பாலமலை ரோடு வெங்கடேசலு நகரை சேர்ந்தவர் தினேஷ் குமார் ( வயது 34 )இவரும் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வஞ்சியாபுரம் பிரிவு ஜெ.ஜெ.நகரில் உள்ள ஒரு தோட்டத்தில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள் . அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாட்டம் நடத்தியதாக அதே பகுதியைச் சேர்ந்த கதிர் சர்வேஷ் ( 25 ...
கோவை துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையில் போலீசார் நேற்று சங்கனூர் ரோட்டில் வாகன சோதனை நடத்தினார்கள் .அப்போது அங்கு வந்த ஒரு மாருதி காரை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். .அதில் தடைசெய்யப்பட்ட 682 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காரும், குட்காவும், ரூ.63,300 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.இதை கடத்தி வந்த ...
கோவை குனியமுத்தூர் அருகே உள்ள இடையர்பாளையம், மணிகண்டன் நகரை சேர்ந்தவர் செல்வகுமார் ( வயது 50) இவர் அ.தி.மு.க. 87-வது வார்டு செயலாளராக பதவி வகித்து வந்தார் . நேற்று இவரது வீட்டில் மோட்டார் போடுவதற்காக சுவிட்சை தொட்டபோது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.வழியில் அவர் இறந்து விட்டார். ...
கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் கபிலன் ( வயது 21) இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.இ.கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார். நண்பருடன் அறை எடுத்து தங்கி உள்ளார். நேற்று முன்தினம் இரவில் அறையின் கதவை திறந்து போட்டு தூங்கிவிட்டனர். அப்போது யாரோ உள்ளே புகுந்து அங்கிருந்த 2லேப்டாப் ,பணம் ரூ ...













