கேரள லாட்டரி டிக்கெட் விற்ற சலூன் கடைக்காரர் கைது..!

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமி செட்டிபாளையம் கணேஷ்புரத்தைச் சேர்ந்தவர் பண்ணாரி ( வயது 63) இவர் அங்குள்ள வண்ணார் கோவில் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முரளி நேற்று திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கிருந்த தடை செய்யப்பட்ட 3-ம் நம்பர் கேரளா லாட்டரி டிக்கெட்டுகள், பில் புக் , பணம் ரூ.6,340 பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சலூன் கடைக்காரர் பண்ணாரி கைது செய்யப்பட்டார். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.