உக்ரைனில் சிக்கி தவித்த தம்மை மீட்க உதவி இந்திய தூதரகத்திற்கும், பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் மாணவி நன்றி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா பயங்கரமான தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கிருக்கும் இந்திய மாணவர்களை மீட்க இந்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டது. அதன்படி, மத்திய அரசின் ஆபரேசன் கங்கா திட்டத்தின் மூலம், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் ...

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த தேவிகாபுரம் 500 ஆண்டுகள் பழமையான பெரியநாயகி அம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் 13 நாட்கள் நடைபெறும். இதில் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். 13 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் ஒரு நாள் திருவிழா நடத்துவதற்கு பட்டியலின வகுப்பை சேர்ந்த நபர் நடத்துவதற்கு வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். ...

பொள்ளாச்சி:பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், இன்று துவங்குகிறது. இதற்காக, போக்குவரத்து மாற்றம் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம், 15ம் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. கடந்த மாதம்,22ம் தேதி கம்பம் நடப்பட்டது முதல் பக்தர்கள், வேப்பிலை, மஞ்சள் நீர் ஊற்றி வழிபாடு செய்கின்றனர். மேலும், ...

டெல்லி: நாட்டின் மினி லோக்சபா தேர்தலாக கருதப்படும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனையடுத்து வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற்றன. 403 தொகுதிகளைக் கொண்ட ...

சென்னை:சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக மகளிர் அணி சார்பில் உலகமகளிர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் பங்கேற்றனர். அவர்களை மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி உள்ளிட்ட மகளிர் அணி நிர்வாகிகள் வரவேற்றனர். எம்ஜிஆர், ஜெயலலிதா உருவப் படங்களுக்கு இருவரும் மலர் தூவி ...

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தி.மு.க  வின் தலைவரும் , முதலமைச்சருமான மு . க . ஸ்டாலின் பங்கேற்று , தி.ம.க  மகளிரணியின் இணையதளத்தைத் தொடங்கி வைத்தார் . இந்நிகழ்வில் பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகள் . உள்ளாட்சி அமைப்புகளில் ...

சென்னை: தமிழக அரசின் 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை வரும் 18-ம் தேதி சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேரவைத் தலைவர் மு.அப்பாவு நேற்று கூறியதாவது: தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 18-ம் தேதி காலை 10 மணிக்கு தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ள பேரவை மண்டபத்தில் தொடங்குகிறது. அன்று, பேரவையில் ...

தமிழ்நாட்டில், 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே மாதத்தில் நடைபெறும் ஆண்டு இறுதித் தேர்வு தேதியில் மாற்றம் இருக்காது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். நம் பள்ளி நம் பெருமை” என்ற திட்டத்தின் கீழ் பள்ளி மேலாண்மைக் குழுவை வலுப்படுத்துவதற்கு பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி, நம் பள்ளி நம் ...

நேட்டோ அமைப்பில் உக்ரைனைச் சோக்கும் விருப்பத்தைக் கைவிட்டுவிட்டதாக அந்த நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளாா். மேலும், கிரீமியா தீபகற்பத்தை ரஷியப் பகுதியாகவும் கிளா்ச்சியாளா் கட்டுப்பாட்டுப் பகுதிகளை தனி நாடுகளாகவும் அங்கீகரிப்பது குறித்து ரஷியாவுடன் சமரசப் பேச்சுவாா்த்தை நடத்தவும் தயாராக இருப்பதாக அவா் கூறினாா். நேட்டோவில் இணையப் போவதில்லை என்று உத்தரவாதம் அளிப்பது, கிளா்ச்சியாளா் பகுதிகளை ...

டெல்லி: பியூச்சர் போன்களுக்கு யூபிஐ பேமெண்ட் சேவையை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிமுகப்படுத்தினார். இதன்மூலம் ஸ்மார்ட்போன் இல்லாமல் இருக்கும் 20 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை யூபிஐ தளத்திற்குள் இணைக்க முடியும். யூபிஐ பேமெண்ட் சேவை நமது பொருளாதாரத்தில் நிதி நிலைமையை ஊக்குவிக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்திருக்கிறார். ...