தான் மட்டுமே ஊழலை ஒழிக்க வந்ததுபோல் அண்ணாமலை பேசி கொண்டியிருப்பதாக கேபி முனுசாமி கண்டனம். தான் மட்டுமே நாட்டுக்காக பாடுபடுபவர் போல் பேசிக்கொண்டு இருக்கிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என்று அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், அண்ணாமலை நேற்று வெளியிட்ட பட்டியல் மாநில தலைவர் என்ற ...

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், அடுத்தடுத்து பல்வேறு துறைகளில் கால்பதித்து அதில் சாதித்தும் வருகிறார். அந்த வரிகையில், கடந்த அக்டோபர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கினார். மஸ்க் வாங்கியது முதல் பல்வேறு புதிய அதிரடி நடவடிக்கைகள், அப்டேட்களை மேற்கொண்டு வருகிறார். தொடக்கத்தில் இவரது நடவடிக்கைகள் தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. எனினும் ...

ராகுல்காந்தி தகுதி நீக்கத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று காலை 11 மணிக்கு ரயில் மறியல் போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத்தின் சூரத் நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பு வழங்கியது. ...

பெரியகுளம்: தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரவு 10.30மணிக்கு காவல் நிலையம் தாக்கப்பட்டதுடன் ஆய்வாளர் ஜீப் , ஆம்புலன்ஸ் மற்றும் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நேற்று (14-04-23) காலை முதல் இரவு வரை அம்பேத்கர் பிறந்தநாள்விழா ...

தஞ்சாவூர்: பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ஊழல் பட்டியல் குறித்து திமுக அமைச்சர்கள் பதில் சொல்ல வேண்டும் என அமமுக பொதுச் செயலர் டிடிவி.தினகரன் தெரிவித்தார். அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூரில் நேற்று அம்பேத்கர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அவர், செய்தியாளர்களிடம் கூறியது: பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ஊழல் பட்டியல், ...

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மதுரைக்கு இன்று வந்தார். பெருங்குடி அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு அருகில் வைக்கப்பட்ட அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான், “திமுகவின் ஊழல் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அண்ணாமலை திமுக அமைச்சர்கள் ஊழல் ...

கோவை: குடிமைப்பொருள் குற்றப்புலாய்வுதுறை கோவை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி உத்தரவின் பேரில் துணை சூப்பிரண்டு கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் மேனகா மற்றும் போலீசார் பல்லடம்- செட்டிபாளையம் ரோட்டில் சித்த நாயக்கன்பாளையம் சந்திப்பில் நேற்று வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 15 டன் ...

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா பங்கேற்ற பொது நிகழ்வில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை மேற்கு ஜப்பான் பகுதியில் உள்ள வகயாமாவில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு குண்டு வீசியதில் அது வெடித்து புகை கிளம்பியது. உடனடியாக பாதுகாவலர்கள் பிரதமர் கிஷிடாவை சூழ்ந்து கொண்டு அங்கிருந்து ...

கோவை ஆர் .எஸ் .புரம் .வி.சி.வி.ரோடு .ஆர் ஆர் லேஅவுட்டில் தனியாருக்கு சொந்தமான சர்வீஸ் அப்பார்ட்மெண்ட் உள்ளது. இங்குள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து பெரிய அளவில் சீட்டாட்டம் நடப்பதாக ஆர். எஸ். புரம் போலீசுக்கு நேற்று மாலை ரகசிய தகவல் வந்தது .உதவி போலீஸ் கமிஷனர் ரவிக்குமார் தலைமையில் போலீசார் விரைந்து சென்று திடீர் ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்பக்கம் உள்ள சிக்கத் தாசம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஞானமணி ( வயது 38) ஐ. டி ஊழியரான இவர் கொரோனா தொற்று காலத்தின் போது ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்ற அறிவிப்பை நம்பி ஒரு செயலி மூலம் பணத்தை முதலீடு செய்துள்ளார். பல்வேறு கட்டங்களாக அவர் அந்த செயலி ...