லாரியில் கடத்தப்பட்ட 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல் – 2 பேர் கைது..!

கோவை: குடிமைப்பொருள் குற்றப்புலாய்வுதுறை கோவை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி உத்தரவின் பேரில் துணை சூப்பிரண்டு கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் மேனகா மற்றும் போலீசார் பல்லடம்- செட்டிபாளையம் ரோட்டில் சித்த நாயக்கன்பாளையம் சந்திப்பில் நேற்று வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 15 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.லாரியுடன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக லாரி டிரைவர் முத்து முனியாண்டி கைது செய்யப்பட்டார். இந்த கடத்தலில் தொடர்புடைய மதுரை, அவுசிங் யூனிட்டைச் சேர்ந்த சத்தியமூர்த்தி ( வயது 42) என்பவர் தலைமறைவாக இருந்தார் .அவரை இன்ஸ்பெக்டர் மேனகா தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணையில் 15 டன் ரேஷன் அரிசியை கோவையில் உள்ள கோழி பண்ணைகளுக்கு விற்க முயன்றது தெரிய வந்தது.