தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் இன்று காலை 11 மணிக்கு ரயில் மறியல்.!!

ராகுல்காந்தி தகுதி நீக்கத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று காலை 11 மணிக்கு ரயில் மறியல் போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.

பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத்தின் சூரத் நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பு வழங்கியது.

அதனைத்தொடர்ந்து ராகுல் காந்தி அவசர அவசரமாக எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலிருந்து போட்டியிட்டு எம்.பி.யானார்.