அப்பார்ட்மெண்டில் வீடு வாடகைக்கு எடுத்து மெகா சூதாட்டம் -18 பேர் கைது..!

கோவை ஆர் .எஸ் .புரம் .வி.சி.வி.ரோடு .ஆர் ஆர் லேஅவுட்டில் தனியாருக்கு சொந்தமான சர்வீஸ் அப்பார்ட்மெண்ட் உள்ளது. இங்குள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து பெரிய அளவில் சீட்டாட்டம் நடப்பதாக ஆர். எஸ். புரம் போலீசுக்கு நேற்று மாலை ரகசிய தகவல் வந்தது .உதவி போலீஸ் கமிஷனர் ரவிக்குமார் தலைமையில் போலீசார் விரைந்து சென்று திடீர் சோதனை நடத்தினார்கள் .அப்போது அங்குள்ள ஓர் அறையில் பணம் வைத்து சீட்டு விளையாடியது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த பிரசாத் ( 37 ) சந்தோஷ் குமார் (34) தனபால் ( 37 )விக்னேஷ் (42) கணேசன் ( 36 ) ஸ்ரீகாந்த் ( 47 ) கணேஷ்குமார் (40) மதன்குமார் (52) அசோக்குமார் ( 45 ) சிவக்குமார் 50 மனோஜ் 34 அருண்குமார் ( 40 )செல்வம்( 36 )கண்ணா மாறன் (48 )விஜயசங்கர் ( 31 ) கார்த்திக் ( 33 ) கிருஷ்ணமுத்து (37) கார்த்திக் குமார் ( 40)ஆகியோர் கைது செய்யப்பட்டனர் சீட்டு விளையாட பயன்படுத்தப்பட்ட ரூ2 லட்சத்து 70 ஆயிரத்து 800 பறிமுதல் செய்யப்பட்டது.இவர்களில் நகை பட்டறை அதிபர்கள் வியாபாரிகள் அடங்குவார்கள்.