அதிமுகவினரின் ஊழல் பட்டியலையும் அண்ணாமலை வெளியிட வேண்டும் – சீமான் பேட்டி..!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மதுரைக்கு இன்று வந்தார். பெருங்குடி அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு அருகில் வைக்கப்பட்ட அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான், “திமுகவின் ஊழல் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அண்ணாமலை திமுக அமைச்சர்கள் ஊழல் பட்டியலை வெளியிட்டதால் அதிமுகவில் இருப்பவர்கள் எல்லாம் பரிசுத்தமானவர்கள் அல்ல? யார் ஊழல் செய்தாலும் அவர்களுடைய ஊழல் பட்டியலை அவர் வெளியிடுவாரா?ஊழல் பட்டியலை வெளியிடும் அண்ணாமலை, ஊழல் செய்தவர்களோடு கூட்டணி வைக்க மாட்டேன் என சொல்வாரா?. நேர்மையான அரசியல்வாதியாக இருந்தால் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதும், ஆட்சி செய்தவர்கள் மீதும் உள்ள ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிட வேண்டும்” என்றார்.