பயணிகளின் கவனத்திற்கு…கோவை வழியாக செல்லும் 2 சிறப்பு ரயில்கள் ரத்து..!!

கோவை: ஒடிசா ரூர்கேலா ஸ்டேஷன் யார்டில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடப்பதால், 2 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.ரயில் எண் (03358) கோவையிலிருந்து இன்று நள்ளிரவு, 12:50 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக பரவுனி செல்லும் சிறப்பு ரயில், 4ம் தேதி மற்றும் 11ம் தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.ரயில் எண் (03357) பரவுனியில் இருந்து 23:45 க்கு புறப்பட்டு காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு வழியாக கோவை வரும் சிறப்பு ரயில், 7ம் தேதி மற்றும் 14ம் தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது..