இருகூரில் துணிகரம்… வீட்டின் முன் கோலம் போட்ட மூதாட்டியிடம் 15 பவுன் நகை பறிப்பு.!!

இருகூரில் வீட்டின் முன் கோலம் போட்ட மூதாட்டியிடம் 15 பவுன் செயின் கொள்ளை..

கோவை இருகூரில் உள்ள ஜனதா நகரை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மனைவி கமலவேணி (வயது 65) இவர் இன்று அதிகாலை 4 மணிக்கு அவரது வீட்டின் முன் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக நடந்து வந்த ஒரு ஆசாமி திடீரென்று இவர்மீது பாய்ந்து அவரது கழுத்தில் கிடந்த 15 போன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டான். இது குறித்து கமலவேணி சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமியை தேடி வருகிறார்கள். கோலம் போட்ட மூதாட்டியிடம் 15 பவுன் செயின் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா மூலம் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்…