முன் விரோதத்தால் வாலிபரை கத்தியால் குத்தி கொல்ல முயற்சி- 2 பேர் கைது..!

கோவை சரவணம்பட்டி விநாயகபுரம் .கம்பன் வீதியைச் சேர்ந்தவர் சுரேஷ். அவரது மகன் ரித்திக் ( வயது 19) இவர் நேற்று வெற்றிவேல் வீதியில் நின்று கொண்டிருந்தார் . அப்போது கோவிலில் ஜமாப் அடிப்பதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக அவரை விளாங் குறிச்சி ரோட்டை சேர்ந்த காளிதாஸ் (வயது 45) விநாயகபுரம் சூரிய பிரசாந்த் (வயது 25) ஆகியோர் சேர்ந்து கத்தியால் குத்தினார்கள். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைகாக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து காளிதாஸ் சூர்யா பிரசாந்த் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மீது கொலை முயற்சி உட்பட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.